Erode

News November 25, 2024

பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஈரோடு வருகை 

image

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (நவ.25) ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு கோபி – ஸ்ரீ கார்த்திகேயன் மஹாலில் தமிழ் மாணவர் மன்றம் துவக்க விழா, பின் மொடச்சூர், சீதாலட்சுமிபுரம் – கலைஞர் நூலகம் திறப்பு விழா மற்றும் பெரியபுலியூர் – கலைஞர் நூலகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார் என திமுகவினர் தெரிவித்துள்ளனர்.

News November 24, 2024

ஈரோடு: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ வரட்டு பள்ளம் அணையில் எம்எல்ஏ பார்வை ➤ ஈரோட்டில் ரூ.1.20 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் ➤ நடமாடும் நியாய விலைக் கடை துவக்கம் ➤ பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை ➤ வெள்ளோட்டில் கோ-கோ போட்டி ➤ ஆசனூர் அருகே சாலையில் விழுந்த மூங்கில் மரம் ➤ திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ➤ கஞ்சா விற்பனை செய்த நபர் மீது வழக்கு பதிவு ➤ ரூ.1.42 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

News November 24, 2024

ஈரோடு: பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை 

image

ஈரோட்டை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் போது, வெண்டியபாளையத்தை சேர்ந்த தினேஷ் (23) என்பவர்  அறிமுகமாகியுள்ளார். 2 மாதங்களாக இவர்கள் இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் தினேஷ் ஈரோடு வெண்டிபாளையம் வருமாறு அழைத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த்துள்ளனர். 

News November 24, 2024

ஈரோடு அருகே விபத்து

image

கோபி அருகே அக்கரைகொடிவேரி பகுதியில், நேற்று மாலை சத்தியமங்கலம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலை நடுவே உள்ள தடுப்பு கற்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் பயணித்த 3 பேர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 24, 2024

பர்கூர்: ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பில் பணிகள் 

image

ஈரோடு மாவட்டம் பர்கூர் கொள்ளேகால் சாலையில், 150 மீட்டர் நீளத்திற்கு ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது (மழைக்காலங்களில் ஏற்படும் சேதங்களைத் தடுக்கும் பொருட்டு). பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

News November 24, 2024

வரட்டு பள்ளம் அணையில் எம்எல்ஏ பார்வை

image

அந்தியூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள வரட்டு பள்ளம் அணை, கடந்த சில நாட்களாக மழைப்பொழிவின் காரணமாக முழு கொள்ளளவை 33.46 அடி எட்டியுள்ளது. இந்த அணையினை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாஜலம், மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் காசி, விவசாயிகள் பார்வையிட்டனர்.

News November 23, 2024

ஈரோடு: இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ ஈரோட்டில் அமரன் படம் பார்த்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் ➤ குவாரி வெடி விபத்து வழக்கில் தேடப்பட்டவர் கைது ➤ சத்தி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து ➤ கோபி வாய்க்காலில் கிடந்த ஆண் சடலம் ➤ பெண்கள் கபாடி போட்டி: அமைச்சர் துவங்கி வைப்பு ➤ பவானிசாகர் பேரூராட்சியில் சிசிடிவி துவக்க விழா ➤ ரூ.13.20 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் விற்பனை ➤ ஈரோட்டில் பழங்குடியின மக்களுக்கு 25, 26ல் சிறப்பு முகாம்

News November 23, 2024

ஈரோடு: தேசிய அளவில் சாதித்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

image

தேசிய அளவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட மகளிர் கபடி போட்டி மத்திய பிரதேசத்தில் நடைபெற்றது, இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி ஹரியானா அணியை எதிர்கொண்டது, ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தங்க பதக்க வாய்ப்பை இழந்தது, இதனால் தமிழ்நாடு அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது, வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக அணியினர் நேற்று ஈரோடு வந்தனர், ரயில் நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News November 23, 2024

ஈரோட்டில் அமரன் படம் பார்த்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்

image

ரவுண்டு டேபிள் இந்தியா எனும் அமைப்பின் மூலமாக மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான மறுவாழ்வு இல்லத்தில் பயிலும் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈரோடு பஸ்நிலையம் அருகிலுள்ள உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் பற்றிய கதையான, சிவகார்த்திகேயன் சாய்பல்லவி மற்றும் பலர் நடித்துள்ள அமரன் திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர்.

News November 22, 2024

ஈரோடு: 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

image

சூழலியல் மாற்றம் காரணமாக தற்போது மக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 20 நாட்களில், மாநகராட்சி பகுதியில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், போதிய மருந்துகள் இருப்பில் உள்ளது என மாநகர நகர்நல அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!