Erode

News November 27, 2024

ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி

image

அம்மா பேட்டை அருகே உள்ள பூதப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் துரையின்  (36) கூலி தொழிலாளி, இவர் நேற்று பவானி ரோடு பழைய காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் துரை பலத்த காயம் அடைந்தார். அவரை பவானி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர் பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். போலீசார் விசாரித்து வருகின்றனர். 

News November 27, 2024

ஈரோடு அருகே மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி

image

மொடக்குறிச்சி அடுத்த அண்ணாமலை கோட்டையைச் சார்ந்த விவசாயி நாச்சிமுத்து வயது 58, வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் ஆடுகளை பட்டியில் அடை த்து விட்டு சென்றுவிட்டார். நேற்று வந்து பார்த்த போது மர்ம விலங்கு ஏதோ 11 ஆடுகளையும் அடித்து கொன்று விட்டது. இதனை அடுத்து ஈரோடு வனக்காப்பாளர் ஜெயசூர்யா விரைந்து வந்து உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 26, 2024

சென்னிமலை முருகன் கோவில் பேருந்து நிறுத்தம்

image

சென்னிமலையில் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் மலை பகுதியில் சீரமைக்கும் பணிநடைபெறுவதால் நேற்று முதல் கோவில் பேருந்து செல்வது நிறுத்தி வைக்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். எனவே வருகிற 27.11.2024 புதன்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும்வரை பக்தர்கள் படிவழியை பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

News November 26, 2024

ஈரோடு: வாக்காளர் சிறப்பு முகாமில் 38,917 படிவங்கள்

image

ஈரோடு மாவட்டத்தில், வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்குதல், திருத்தம் செய்தல் சிறப்பு முகாம், நவம்பர் 16,17, 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் புதியதாக பெயர் சேர்க்க 17,547 படிவங்கள், நீக்கம், நிரந்தர குடி பெயர்ப்பு ஆட்சேபனைக்கு 3,062 படிவங்கள், திருத்தம் செய்ய 13,429 படிவங்கள் என மொத்தம் 38,917 படிவங்கள் மனுக்களாக பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 26, 2024

ஈரோடு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வரும், 29ல் வேளாண் குறைதீர் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடக்க உள்ளது. காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்னைகள், கருத்துக்களை தெரிவிக்கலாம். மதியம், 12:30 மணி முதல் மதியம், 1:30 மணி வரை அலுவலர்கள் விளக்கம் அளிப்பர்.

News November 25, 2024

சென்னிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டம், சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மலைப்பாதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லாத நிலையில், தற்போது திருக்கோயில் பேருந்தும் இயக்க இயலாத நிலை உள்ளது. எனவே வரும் 27.11.2024 முதல் மறு அறிவிப்பு வரும் வரை, பக்தர்கள் படி வழியினை மட்டும், பயன்படுத்த வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

News November 25, 2024

தாட்கோ (TAHDCO) மூலம் போட்டி தேர்வுக்கு பயிற்சி

image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு (CA)சி.ஏ., (CS)சி.எஸ்., (CMA) சி.எம்.ஏ., போன்ற போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 0424-2259453 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News November 25, 2024

ஈரோடு: நூலகத்தை திறந்து வைத்த அமைச்சர்!

image

ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி, சீதாலட்சுமிபுரத்தில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கலைஞர் நூலகத்தை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று திறந்து வைத்தார். இதில் திமுக மாவட்ட செயலாளர், நல்லசிவம், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

News November 25, 2024

ஈரோடு அருகே மின்தடை அறிவிப்பு

image

பவானி அடுத்த கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (நவ.26) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், பெருமாபாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, குஞ்சரமடை, பெருந்தலையூர், கருக்கம்பாளையம், அய்யம்பாளையம், வெள்ளாங்கோவில், தங்கமேடு, ஆப்பக்கூடல் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News November 25, 2024

ஈரோடு அருகே எகிறிய பூ விலை

image

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ 1,400 ரூபாய்க்கு ஏலம்போனது. இதேபோல் முல்லை-785 ரூபாய்க்கும், காக்கடா-625, செண்டு-மல்லி-37க்கும், கோழிகொண்டை-120க்கும், ஜாதிமுல்லை-750, கனகாம்பரம்-1,360 க்கும், சம்பங்கி-80க்கும், அரளி-220 க்கும், துளசி-40க்கும், செவ்வந்தி-200 ரூபாய்க்கும் விற்பனையானது.

error: Content is protected !!