Erode

News November 30, 2024

ஈரோட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

image

ஈரோடு, நசியனூர் அண்ணா சாலையைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், இவரது மகள் ரக்ஷிதா (18). இவர் ஈரோடு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் செல்போனை இரவில் அடிக்கடி பயன்படுத்துவதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரக்ஷிதா நேற்று இரவு துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 30, 2024

ஈரோட்டில் கள் இறக்குவோம் – நல்லசாமி அறிவிப்பு

image

ஈரோடு, கீழ்பவானி பாசன பயனாளிகள் சங்க தலைவரும், கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கள் போதைப்பொருள் என்று நிரூபிப்பவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு என்று பலமுறை அறிவித்து விட்டோம். இதுவரை நிரூபிக்கப்படவில்லை. வருகிற ஜனவரி 21-ம் தேதி கள் இறக்கி விற்பனை செய்வோம் என்று கூறப்பட்டுள்ளது.

News November 30, 2024

தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் 

image

சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்த உதவியவர்களுக்கு 2024ஆம் ஆண்டின் தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியானவர்கள் தங்களது முழு விவரம், சமூக நீதிக்காக பாடுபட்ட பணி விவரங்களுடன், டிசம்பர் 20-க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News November 29, 2024

ஈரோடு: நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

image

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு, நலவாரியம் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களை பெற தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் நேரில் (அ) இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி!

image

பவானி, குருப்பநாயக்கன்பாளையத்தில் வசித்து வருபவர் குமார். காய்கறி வியாபாரியான இவர், இன்று காலை, பவானி வந்துவிட்டு, பைக்கில் வீடு திருபியுள்ளார். அப்போது பைக்கில் சாலையை கடக்க முயன்ற அவர் மீது, மேட்டூர் செல்லும் தனியார் பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, பவானி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

News November 29, 2024

ஈரோடு: இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம்!

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து இன்று தெரிவித்துள்ள, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தொகை, “ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நன்கு தேரி வருகிறார். அவர் விரைவில் சாதாரண நிலைக்குத் திரும்புவார்” எனக் கூறியுள்ளார்.

News November 29, 2024

ஈரோடு மாவட்ட விவசாயிகளே! நாளை கடைசி நாள்

image

ஈரோடு மாவட்டத்தில், சம்பா (ரபி) பருவத்தில் நெல் சாகுபடிக்கு, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், 1 ஏக்கருக்கு ரூ.573 செலுத்தி எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பயன்பெறலாம். இதற்கு நவம்பர் 30 (நாளை) கடைசி நாள் ஆகும். எனவே விவசாயிகள் விரைந்து பயிர் காப்பீட்டு செய்து கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News November 29, 2024

ஈரோடு மாவட்டத்தில் கடன் பெற சிறப்பு முகாம்கள்!

image

ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் ஈரோடு கூட்டுறவு நகர வங்கியில் டிச.7ம் தேதியும், கோபியில் 11ம் தேதியும், ஈரோட்டை சுற்றியுள்ள இடங்களில், 12ம் தேதியும், நடைபெறுகிறது.

News November 29, 2024

ஈரோட்டில்  வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோட்டில் நவ.30ம் தேதி  அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களான 108, 102, கால்நடை ஆம்புலன்ஸ் வாகனமான 1962 பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 11.30 முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புணராக பணிபுரிய, பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம், ஏ.என்.எம், டி.எம்.எல்.டி (பிளஸ் 2விற்கு பின், 2 ஆண்டுகள் படித்திருக்கவேண்டும்) வயது 19 முதல் 30 வரை இருக்கவேண்டும்.

News November 29, 2024

சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு

image

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு சைபர் கிரைம் எனப்படும் ஆன்லைன் மோசடி தொடர்பாக விளக்கம் அளித்தார். சைபர் கிரைம் மோசடி தொடர்பான புகார்களை 1930 என்ற தொலைபேசி எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

error: Content is protected !!