Erode

News December 6, 2024

முதலமைச்சர் வருகை: அமைச்சர் முத்துசாமி ஆய்வு

image

ஈரோடு மாவட்டத்திற்கு கள ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 19, 20 தேதிகளில் வருகிறார். இதற்கான விழா மேடை அமைக்க ஈரோடு சோலார் பஸ் நிலையம் பகுதியில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

News December 6, 2024

நூதன ஆன்லைன் மோசடி: பொதுமக்களே உஷார்

image

ஈரோட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரியான சீனிவாசன் என்பவருக்கு வந்த செல்போன் அழைப்பில், தான் சிபிஐ அதிகாரி என தெரிவித்துள்ளார். பின், ஆதார் கார்டு, சிம்கார்டு எண்ணை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதனால் நீங்கள் விரைவில் கைது செய்யவுள்ளோம் என கூறி ரூ.27 லட்சத்தை பறித்துக்கொண்டனர். இதனையடுத்து அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் விரைந்து செயல்பட்டு பணத்தை மீட்டனர்.

News December 5, 2024

ஈரோடு: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ 99 அடியை நெருங்கும் பவானிசாகர் நீர்மட்டம் ➤ அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி பணி மும்முரம் ➤ அந்தியூர் பருவாச்சி அருகே கார் மோதி ஒருவர் உயிரிழப்பு ➤ ஈரோடு வழியாக ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் ➤ அம்மாபேட்டையில் 7 அடி மலைப்பாம்பு மீட்பு ➤ ஈரோட்டில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு ➤ ஈரோடு – சம்பல்பூர் ரயில் சேவை நீட்டிப்பு ➤ பவானியில் தீர்த்தக்குடம் எடுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

News December 5, 2024

ஈரோடு – சம்பல்பூர் ரயில் சேவை நீட்டிப்பு

image

ஈரோடு-சம்பல்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஒடிஸா மாநிலம் சம்பல்பூரில் இருந்து புதன்கிழமை தோறும் காலை 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 08311) மறுநாள் இரவு 10.30 மணிக்கு ஈரோடு வந்தடையும். மறுமார்க்கமாக ஈரோட்டில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்தது.

News December 5, 2024

ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு

image

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி, ஈரோடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு ரயில் நிலையத்தில் நேற்று முதல் பயணிகள் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் கூடுதல் போலீஸார், ரயில் நிலையத்தின் நுழைவாயில், மற்றும் ரயில் பயணிகளின் உடைமைகள் சோதனைக்கு பிறகு அனுமதிக்கின்றனர்.

News December 5, 2024

ஈரோடு வழியாக ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்

image

அசாமில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் திடீர் சோதனை நடத்தியபோது, பொது பெட்டியில் 2 பைகள் கேட்பாரற்று கிடந்தது. அந்த பைகளை பார்த்தபோது அதில் போதை பொருளான கஞ்சா இருந்தது. மர்ம நபர்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி, தமிழகத்தில் விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

News December 5, 2024

ஈரோடு மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் நாளுக்கு நாள் புது புது மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அதன்படி, உங்கள் OTP, ஆதார் அல்லது வங்கி விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம். ஆன்லைனில் தனிப்பட்ட தகவல்களை வழங்குவது உங்களுக்கு ஆபத்தாக முடியும். எனவே மக்கள் சமூக வலைதள போலி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்.  சைபர் கிரைம் உதவிக்கு, 1930 எண்ணை அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News December 5, 2024

99 அடியை நெருங்கும் பவானிசாகர் நீர்மட்டம்

image

பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து 6,049 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அணை நீர்மட்டம் 98.54 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு, 27.60 டி.எம்.சி.,யாக உள்ளது. பாசனத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

News December 5, 2024

ஈரோடு கனிமார்க்கெட் வளாகத்தில் போராட்டம்

image

ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் சுமார் 240 ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கழிப்பறையை தினமும் சுத்தப்படுத்த வேண்டும், கடைக்காரர்கள் வாகனங்களை கட்டணமில்லாமல் நிறுத்த அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (4-12-24) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளரிடம் ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

News December 4, 2024

ஈரோடு: மனுநீதி நாள் முகாம்

image

தாளவாடி தாலுகாவுக்கு உட்பட்ட தலைமலையில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில், மனுநீதி நாள் முகாம் வரும் 11-ம் தேதி பகல் 11 மணிக்கு நடக்கிறது. இதில் அனைத்து துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்பதால், மலைக்கிராம மக்கள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து, பயன் அடையலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.

error: Content is protected !!