Erode

News December 8, 2024

பெண்களுக்கு இலவச அழகுக்கலை பயிற்சி வகுப்பு

image

ஈரோடு, கொல்லம்பாளையத்தில் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான அழகுக்கலை இலவச பயிற்சி வகுப்பு டிசம்பர் 19ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 0424-2400338, 8778323213, 72006-50604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2024

மரக்கன்றுகள் வழங்கிய அமைச்சர்

image

ஈரோடு, அவல்பூந்துறை அருகே கனகபுரம் – அரசு உயர்நிலைப் பள்ளியில், ஒளிரும் ஈரோடு மற்றும் பள்ளி தேசிய பசுமை படை சார்பில், ‘விதை சிறிது, விடை பெரிது” பசுமை திருவிழாவை முன்னிட்டு நேற்று மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

News December 7, 2024

பெருந்துறையில் கஞ்சா விற்றவர் கைது

image

பெருந்துறையை சுங்கச்சாவடி, ஆவின் பால் விற்பனை நிலையப் பகுதியில், கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக, பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் நடத்திய சோதனையில், 3.5 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக முருகேசன்  என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த, ரூ.40000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News December 7, 2024

காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

image

ஆங்கில புத்தாண்டு 2025 நெருங்கி வருவதை ஒட்டி ஈரோட்டில் காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களில் நடந்த பணிகளைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த ஆண்டு புது வித காலண்டர்கள் மவுசு அதிகரித்துள்ளது என ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆர்டர்கள் விரைந்து முடிக்க உள்ளதாகவும் ஜாகிர் உசேன் கூறினார்.

News December 7, 2024

பவானி தினசரி மார்க்கெட்டிற்கு நாளை விடுமுறை

image

பவானியில் பிரசித்திபெற்ற செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெற உள்ளது. இந்நிலையில், பவானி தினசரி மார்க்கெட்டிற்கு நாளை(8.12.24) விடுமுறை அறிவித்து பவானி வட்டார தினசரி அழுகும் பொருள் & மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 7, 2024

பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்

image

ஈரோடு மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச்-ஏப்ரல் 2025ல் நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத விண்ணப்பிக்க உள்ள தனித்தேர்வர்கள், டிசம்பர் 17ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 மையங்களில் (பவானி-1,ஈரோடு-3, பெருந்துறை-1, சத்தி-1, கோபி-1) விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களை விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 6, 2024

அந்தியூர்: காரில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

image

ஈரோடு, அந்தியூர், வெள்ளி திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் இரு தினங்களுக்கு முன்பு, ஈரோட்டில் சமையல் வேலையை முடித்துவிட்டு, அந்தியூருக்கு இரவு வாடகை காரில் வந்துள்ளார். வரும் வழியில் காரை நிறுத்திய ஓட்டுநர் பிரகாஷ், மற்றும் அலாவுதீன் ஆகியோர், செல்லம்மாளுக்கு, பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து செல்லம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News December 6, 2024

ஈரோடு வந்த ரயிலில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்

image

விசாகாப்பட்டினம் – கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து ஈரோடு வந்தது. வரும் வழியில் பொது பெட்டியில் ஈரோடு ரயில்வே போலீசார், சோதனை நடத்தினர். அப்போது யாரும் உரிமை கோராமல் இருந்த 2 பைகளை திறந்து பார்த்தபோது, கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிந்தது. மொத்தம் 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

News December 6, 2024

ஈரோடு: வாடகை செலுத்தாத 74 கடைகளுக்கு நோட்டீஸ்

image

ஈரோடு ஜவுளி ஒருங்கிணைந்த வளாக கட்டிடத்தில், செயல்பட்டு வரும் கடைகளுக்கு, மாத வாடகையாக ரூபாய் 3,540, மாநகராட்சி மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை செலுத்தாத 74 கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரி மணிஷ் உத்தரவின் பேரில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு, நோட்டீஸ் நேற்று அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை வாடகை பாக்கி, ரூ.26 லட்சத்து 19ஆயிரத்தி 600 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.

News December 6, 2024

பாபர் மசூதி இடிப்பு தினம்: பலத்த பாதுகாப்பு 

image

பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6ஆம் தேதி நாடு முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்படுவது வழக்கம். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் எஸ்.பி., கு.ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு காவிரி ரயில் பாலம், ரயில் நிலையம், மாவட்ட எல்லை பகுதி சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை (ம) கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!