Erode

News December 12, 2024

மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதி

image

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் தலைமை தாங்கி பேசிய மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் உள்ள சாலை வசதி இல்லாத குக்கிராமங்களில் சாலைகளை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில் மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News December 12, 2024

அடுக்கு முறை காய்கறி சாகுபடி: கலெக்டர் பார்வை

image

திம்பம் மலைப்பகுதியில் அரேபாளையத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (மைராடா) சூழலியல் சுற்றுலா புதிய அணுகுமுறையின் கீழ் அடுக்கு முறை காய்கறி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இன்று பார்வையிட்டார். அடுக்குமுறை காய்கறி சாகுபடியின் பயன், செலவு போன்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

News December 12, 2024

தாளவாடியில் 24 மணி நேரமும் கர்நாடக மது விற்பனை

image

தாளவாடி சுற்று வட்டார கிராமங்கள் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது.  இங்கு 24 மணி நேரமும் கர்நாடக மது விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. இன்று திகனாரை கிராமத்தில் கர்நாடக மது விற்பனை நடைபெற்றதை அங்குள்ள இளைஞர்கள் படம் பிடித்து புகாராக அனுப்பி உள்ளனர். கர்நாடக மது எளிதாக கிடைப்பதால் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 12, 2024

ஈரோடு நகர் பகுதியில் நாளை மின்தடை

image

ஈரோடு துணைமின் நிலையத்தில் (வீரப்பன்சத்திரம், நாராயணவலசு மின் பாதை) நாளை (டிச.13) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, வீரப்பன்சத்திரம், எஸ்.ஜி.வலசு, சிஎன்சி கல்லூரி, நாராயணவலசு, மாணிக்கம்பாளையம், நல்லிதோட்டம், காமதேனு நகர், வெட்டுக்காட்டுவலசு, சம்பத் நகர், ராணி நகர், சஞ்சய் நகர், சோலை மருத்துவமனை, பெரியவலசுபகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2024

ஈரோட்டில் மழை: மாணவர்கள் அவதி

image

ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தொட்டிபாளையம், பவளத்தாம்பாளையம், சாணார்பாளையம், ராயபாளையம், டி.என்.பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கள்ளிப்பட்டி கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம் பங்களாபுதூர், வாணிபுத்தூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

News December 12, 2024

 ஈரோட்டில் ரூ.30 லட்சம் மோசடி

image

கவுந்தப்பாடியில் சலங்க பாளையத்தைச் சேர்ந்த யுவராஜ்,மேலும் சுற்று வட்டார பகுதி மக்கள் சிலர் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். மின்னவேட்டு பாளையத்தை சேர்ந்தவரிடம் மாதச் சீட்டு செலுத்தியதாகவும், பத்து மாதங்கள் மட்டும் நடத்தி விட்டு பாதியில் விட்டு விட்டதாகவும் ரூபாய் 30 லட்சம் வரை பணம் ஏமாற்றிவிட்டார் என்றும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகார் அளித்தனர்.

News December 12, 2024

ஈரோடு: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் ஈரோடு எம்பி மனு ➤சிறப்பாக நடைபெற்ற வெள்ளோடு மாரியம்மன் கோயில் பொங்கல் விழா ➤ஈரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை: 4 வயது மகன் பலி ➤டி.என்.பாளையத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த முதியவர் கைது ➤கொளப்பலூர் மற்றும் பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை ➤பவானி சாகர் அணையில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து.

News December 11, 2024

மத்திய ரயில்வே அமைச்சரிடம் ஈரோடு எம்.பி., மனு

image

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து இன்று மனு அளித்தார். அதில், ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்றி அமைக்குமாறு, (2 வது முறையாக) வலியுறுத்தினார். இதற்கு உறுதியாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவாதம் அளித்ததாக ஈரோடு எம்.பி., தெரிவித்தார்.

News December 11, 2024

தாளவாடியில் மனுநீதி நாள் முகாம்

image

ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகா, தலமலை கிராமத்தில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய வளாகத்தில் இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டு115 பயனாளிகளுக்கு ரூ.71.18 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் துணை ஆட்சியர் (பயிற்சி) சிவப்பிரகாசம், தாளவாடி வட்டாட்சியர் சுப்பிரமணி பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

News December 11, 2024

கோபியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

கோபி அருகே பொலவக்காளிபாளையம் – புதுக்கரைப்புதூர் சாலையில், எல்லமடை – கூகலூர் கிளை வாய்க்காலில் சைபன் பாலம் அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிகவும் அழுகிய நிலையில் மற்றும் அடையாளம் தெரியாத நிலையில் எடுக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கோபி போலீசார் இறந்து போனவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!