India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (டிசம்பர் 16) நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை (ம) காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டிச.20 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தனியார் நிறுவனங்களில் செவிலியர், டெய்லர், கணினி ஆப்ரேட்டர், தட்டச்சர், டிரைவர் போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். எனவே வேலை வாய்ப்பு தேடுபவர்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டு ஜன.4 ஈவிகேஎஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். அவர் மறைவால் மீண்டும் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அடுத்த வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈவிகேஎஸ்.இளங்கோவன் 2-வது மகன் சஞ்சய்சம்பத், 2 ஆண்டுகளாக கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ 2,740 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் முல்லை ரூ.980, காக்கடா ரூ.1,225, செண்டுமல்லி ரூ.105, கோழிகொண்டை ரூ.145, ஜாதிமுல்லை ரூ.900, கனகாம்பரம் ரூ.670, சம்பங்கி ரூ.60, அரளி ரூ.470, துளசி ரூ.40, செவ்வந்தி ரூ.180-க்கும் விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
டிச.18 மற்றும் டிச.25 இயக்கப்படும் தன்பாத் – கோவை வாராந்திர சிறப்பு ரயிலும் (03325), டிச.21 மற்றும் டிச.28 இயக்கப்படும் கோவை – தன்பாத் வாராந்திர சிறப்பு ரயிலும் (03326) நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் சென்னை, முகலிவாக்கம் மின் மயானத்தில், 48 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடல், மணப்பாகத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து, மின்மாயனம் வரை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதில் அவரது குடும்பத்தினர், காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் சிறிது நேரத்தில் முழு அரசு மரியாதையுடன், ராமாவராம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
ஈரோடு சின்னசேமூரைச் சேர்ந்த தொழிலாளி கந்தசாமி (31). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவருக்கும், மனைவி கிரிஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த கந்தசாமி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய செயலாளரும் பேரூராட்சி தலைவருமான மெடிக்கல் பா செந்தில் குமார் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடையில், 3900 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1150 முதல், 1230 ரூபாய்; உருண்டை வெல்லம், 2,300 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1300 ரூபாய் முதல் 1410 ரூபாய்; அச்சு வெல்லம், 340 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை 1340 ரூபாய் முதல் 1370 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தைவிட, நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் வரத்து அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.