Erode

News December 20, 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

image

ஈரோட்டில் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு விருந்தினர் இல்லத்தில் தங்கியுள்ளார். அங்கு அவரது தலைமையில் ஈரோடு மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள், சட்டசபை மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

News December 20, 2024

2026ல் ஈரோடு பாதை தமிழ்நாட்டுக்கே வழிகாட்டி

image

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் திட்டங்கள் இரண்டு நாள் ஈரோட்டில் கள ஆய்வு மேற்கொள்ள நேற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை ஈரோடு அடுத்த மேட்டுக்கடையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 2026 தேர்தலில், இலக்கு 200இல், ஈரோட்டின் பங்கு இணையற்றதாக இருக்க வேண்டும். ஈரோட்டு பாதை 2026இல், தமிழ்நாட்டுக்கே வழிகாட்டுவதாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

News December 20, 2024

மக்களைத் தேடி மருத்துவம் உலகில் வேறெங்கும் இல்லாத திட்டம்

image

ஈரோடு, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் என்பது இந்திய அளவில் அல்ல உலகளவில் வேறு எங்கேயும் செயல்படுத்தப்படாத திட்டம் என்பதால் தான் ஐநா மன்றமே இத்திட்டத்துக்கு விருது தந்திருக்கிறது. 2 கோடியாவது பயனாளிக்கு தமிழக முதல்வரால் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வெற்றியை வெளிப்படுத்துகிறது’ என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோட்டில் கூறியுள்ளார்.

News December 19, 2024

விசைத்தறி தொழிலாளர்களை சந்தித்த CM

image

ஈரோடு வருகை தந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேட்டுக்கடையில் உள்ள தறிப்பட்டறையில் தொழிலாளர்களுடன் உரையாடினார். விசைத்தறி கூடங்களுக்கான இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயர்த்தப்பட்டது பயனுள்ளதாக உள்ளதா எனக் கேட்டறிந்தார். அப்போது மின் கட்டண கணக்கெடுப்பை மாதம் ஒரு முறை மேற்கொள்ளுமாறு விசைத்தறியாளர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்ததற்கு, அது ஒரு மின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

News December 19, 2024

பண்ணாரியில் மராமத்து பணிக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர்

image

சத்தியமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கோவில் அன்னதானக்கூடம் விரிவுபடுத்தும் பணி மற்றும் கருணை இல்லம் மராமத்து பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை காலை நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

News December 19, 2024

ஈரோடு: மருந்து பெட்டகம் வழங்கிய முதலமைச்சர்

image

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, இன்று ஈரோடு சென்றுள்ளார். அங்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், நஞ்சனாபுரத்தில் வசிக்கும், 100 வேலைத் திட்டத் தொழிலாளி சுந்தராம்பாளுக்கு, வீடு தேடிச் சென்று, மருந்து பெட்டகங்களை வழங்கினார். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை தொடர்பாக, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

News December 19, 2024

ஈரோடு வந்தார் முதல்வர் ஸ்டாலின்

image

ஈரோடு மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (19.12.2024) வருகை புரிந்துள்ளார். ஈரோட்டில் 2 நாள்கள் களஆய்வு மேற்கொள்ளவுள்ளார். ஈரோடு வந்துள்ள அவருக்கு தொண்டர்கள் வழியெங்கும் மலர்கள் தூவியும், பொன்னாடைகள் பரிசளித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் ஸ்டாலின், வேனில் இருந்த படியே தொண்டர்களுக்கு வணக்கம் செலுத்தி வந்தார்.

News December 19, 2024

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி விவரங்கள்

image

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்றும், நாளையும் ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில், அதற்கான நிகழ்ச்சி விவரம் வெளியாகியுள்ளது. இதில் இன்று காலை 11 மணிக்கு கோவை வரும் முதல்வர், பிற்பகல் 1 மணிக்கு ஈரோட்டில் உள்ள காளிங்கராயன் இல்லத்திற்கு வருகிறார். பின், பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இன்று இரவு காளிங்கராயன் இல்லத்தில் தங்குகிறார்.

News December 19, 2024

50,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

image

ஈரோடு சோலாரில் நாளை (டிச.20) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழாவில் ரூ.951.20 கோடி மதிப்பீட்டில் 559 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.133.66 கோடி 222 புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.284.2 கோடி மதிப்பீட்டில் 50,088 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 19, 2024

ஈரோட்டில் யார் போட்டி: CM ஆலோசனை

image

சில நாள்களுக்கு முன் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாணதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இடைத்தேர்தலில் எந்த கட்சி போட்டி, யார் வேட்பாளர் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று கட்சியினருடன் ஆலோசனை நடத்தவுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இங்கு போட்டி திமுகவா? அல்லது காங்கிரஸ்சா? என்பது தெரியவரும்.

error: Content is protected !!