Erode

News December 24, 2024

மாவட்ட வேளாண் குறைதீர் நாள் கூட்டம்

image

ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் (டிச-26)ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகிக்கிறார். இதில், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறை கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 24, 2024

ஜவுளிச்சந்தையில் விற்பனை அமோகம்

image

ஈரோடு சென்ட்ரல் மார்க்கெட்டில் திங்கட்கிழமை இரவு ஜவுளிச்சந்தை கூடுகிறது. இன்று கூடிய சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் கடைகள் அமைத்திருந்தனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு முன்னிட்டு ஜவுளி விற்பனை அமோகமாக காணப்பட்டது. ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஜவுளி வாங்க குவிந்ததால் விற்பனை அமோகமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News December 24, 2024

ஈரோட்டில் இருந்து பேருந்துகள் இயக்கம்

image

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழனி, திருநெல்வேலி, நாகர்கோயில், தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு கூடுதலாக 40 சிறப்பு பேருந்துகள் டிசம்பர் 25ம் தேதி வரை இயக்கப்படும் என த.அ.போ.க ஈரோடு மண்டல பொதுமேலாளர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

News December 24, 2024

ஈரோட்டில் தொழில் முனைவோர்களுக்கு ஓர் வாய்ப்பு

image

ஈரோட்டில் சிறந்த தொழில் முனைவோருக்கு விருது “BE-ICON AWARDS” சார்பில் வழங்கப்படுகிறது. இவ்விழா ஈரோட்டில் உள்ள Hotel Turemricஇல் நாளை (டிச.25) மாலை 4 மணிக்கு நடக்க இருக்கிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வில் கலந்து கொள்ள உடனே https://www.beicon.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். மேலும், விபரங்களுக்கு 99405-06460 என்ற அழைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News December 24, 2024

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

image

நெல்லையில் கோர்ட்டு வளாகத்தின் முன்பு நடந்த கொலை காரணமாக, அனைத்துக் கோர்ட் வாயில்களையும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து உடனடியாக அமலுக்கு கொண்டு வந்தார். இதன் அடிப்படையில் கோபியில் உள்ள நீதிமன்றத்தின் முன்பு நேற்று முதல் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News December 24, 2024

இதுவரை 86,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர், ஈரோடு மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, காவல் ஆய்வாளர் சுதா தலைமையில், உதவி காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினார், மேனகா மற்றும் போலீசார், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் நடப்பாண்டில் இதுவரை, 86,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து, 378 பேரை, போலீஸ்சார் கைது செய்துள்ளனர்.

News December 23, 2024

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனு அளிப்பதற்காக, ஈரோடு வைரபாளையத்தைச் சேர்ந்த சின்னம்மா (80) என்ற மூதாட்டி, ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்தார். அப்போது, அவர் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணையை, உடலில் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்த, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மூதாட்டியிடம் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்தனர்.

News December 23, 2024

ஒரத்துப்பாளையம் அணையில் நீரை தேக்கி வைக்க அனுமதி

image

ஒரத்துப்பாளையம் அணையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், பின்னலாடை சாயக் கழிவுகளால், நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கழிவு நீர் சுத்திகரிப்புக்கு பின், ஒரத்துப்பாளையம் அணையில், கழிவு நீர் கலக்காமல் வருவதால், அணையில் நீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News December 23, 2024

ஈரோடு நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

image

திருநெல்வேலி நீதிமன்றத்தில் மாயாண்டி (23) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று டி.ஜி.பி. சங்கர்ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.  அதன்படி, ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

News December 23, 2024

ஈரோடு: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (டிச.23) நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை (மற்றும்) காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.

error: Content is protected !!