India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நம்மில் பலருக்கு ஊர் பெயர் எப்படி வந்தது என அவ்வப்போது சந்தேகம் எழும். அந்த வகையில் “ஈரோடு” என்ற பெயர் எப்படி வந்தது என பார்ப்போம். இந்த ஊரியில் உள்ள பெரும்பள்ள ஓடை, பிச்சைக்காரன் பள்ள ஓடை என்ற இந்த 2 ஓடைகள் சேர்ந்தது தான் ஈரோடை. இதை தான் காலப்போக்கில் “ஈரோடு” என்றதாக வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர். ஈரோடு மக்களே இதே போல் உங்கள் ஊர் குறித்த வெவ்வேறு வரலாறு இருந்தால் கமெண்ட் பண்ணுங்க.
1. ஈரோடு மாவட்டத்தில் வேலுநாச்சியார் பிறந்ததினம் அனுசரிக்கப்பட்டது.
2.ஈரோடு அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் தானம்.
3.ஈரோட்டில் கலைத்திருவிழா தொடங்கியது.
4.ஈரோட்டில் நாளை சைக்கிள் போட்டி மாணவ மாணவிகளே ரெடி ஆகிக்கோங்க!
5. கர்நாடக மது பாக்கெட் வைத்திருந்தவர் கைது
ஈரோடு அரசு மருத்துவமனையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் தானமாக பெறப்படுகிறது. கடந்த 4 மாதங்களில் தாய்மார்களிடம் இருந்து, 83 லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டுள்ளது. இதன் மூலமாக 395 பச்சிளம் குழந்தைகள் பயன் அடைந்தனர்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில், கடந்த ஆண்டில், 2,820 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 1,911 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் செய்யப்பட்டன. இதேபோல் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 12,430 பேருக்கு நாய் கடி சிகிச்சையும், 383 பேருக்கு பாம்பு கடி சிகிச்சையும் வழங்கப்பட்டதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் உணவகங்கள், பேக்கரிகள், தேநீர் கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அப்போது ஆய்வு நடத்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் 9,856 கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு மேற்கொண்டது. அதில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்த 349 கடைகள் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது என மாநகராட்சி அறிவித்தது.
ஈரோடு மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு, மாநில அளவிலான கலைத்திருவிழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவை, அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். இன்று 2,660 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். நாடகம், நடனம், நாட்டுப்புற பாடல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மல்டி ஸ்பெசியலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு கடந்த ஆண்டு மட்டும், 7 லட்சத்து 45 ஆயிரத்து 56 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 52 ஆயிரத்து 321 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். 2,580 புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 17,053 பேர் சி.டி. ஸ்கேன், 54,421 பேர் எக்ஸ்ரே, 26,061 பேர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்துள்ளனர்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், மாணவ மாணவிகளுக்கு, மாரத்தான் போட்டி, ஈரோடு வ உ சி விளையாட்டு மைதானத்திலிருந்து, நாளை மறுநாள் (ஜன.5) காலை 6 மணிக்கு தொடங்குகிறது. 17 முதல் 25 வயது, 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகிய பிரிவுகளாக நடத்தப்படும் இந்த போட்டியில், முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 பரிசுகள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், மாணவ மாணவிகளுக்கு, சைக்கிள் போட்டி, ஈரோடு கனிராவுத்தர்குளம் சேமூர் அம்மன் நகரில், நாளை (ஜன.4) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. 13, 15, 17 ஆகிய வயதுக்குட்பட்டவர்களுக்கு, தனித்தனி பிரிவுகளாக நடத்தப்படும் இந்த போட்டியில், முதல் 3 இடங்களில் வெற்றிபெறும் மாணவ மாணவிகளுக்கு, முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 பரிசுகள் வழங்கப்படுகிறது.
ஈரோடு, வீரப்பம்பாளையம் பிரிவு பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, ஈரோடு வடக்கு போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த அருண்பாண்டியன் (37) என்பவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,680 மதிப்பிலான, 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Sorry, no posts matched your criteria.