Erode

News January 11, 2025

ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

ஈரோடு, ஈங்கூர் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி-பாலக்காடு ரயில் ஜன13ம் தேதி ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஈரோடு அருகே ஈங்கூர் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி-பாலக்காடு ரயில் (எண்16843) திருச்சி-ஈரோடு இடையே இயக்கப்படும் என்றனர்.

News January 11, 2025

ஈரோட்டில் இதுவரை வென்றவர்கள்

image

2008ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு பின் இத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. 2011ல் வி.சி.சந்திரகுமார்(தேமுதிக), 2016ல் கே.எஸ்.தென்னரசு(அதிமுக), 2021ல் திருமகன் ஈவெரா(காங்கிரஸ்), 2023ல் இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ். இளங்கோவன் (காங்கிரஸ்) ஆகியோர் வென்றனர். 2025இல் இடைத்தேர்தலில் யார் மகுடம் சூட்டுவார்கள் என்பதை பிப்.8ஆம் தேதி தெரியும்.

News January 11, 2025

வி.சி.சந்திரகுமாரின் அரசியல் பயணம்

image

வி.சி.சந்திரகுமார் 1987இல் திமுக வார்டு பிரதிநிதி, பின்னர் விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர், தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர், 2011இல் பிரிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் தேமுதிக MLAவாக பதவி வகித்தார். 2016ல் திமுக சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர்தென்னரசுவிடம் தோல்வியை தழுவினார். 2016 முதல் திமுக கொள்கை பரப்பு அணி மாநில இணை செயலாளராக உள்ளார். 

News January 11, 2025

இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு

image

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இங்கு பிப்.5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

News January 11, 2025

உடனே வாட்ஸ் அப் பண்ணுங்க

image

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் இடைத்தேர்தலால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மக்களின் கோரிக்கைகளை 1077, 0424-2260211 என்ற எண்ணுக்கு அழைக்கவும். மேலும், 97917-88852 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க.

News January 10, 2025

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டி?

image

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் இன்று (10-ம் தேதி) முதல் 17-ஆம் தேதி வரை பெறப்படுகிறது. இந்நிலையில் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விரைவில் உறுதியான தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News January 10, 2025

247வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த ‘தேர்தல் மன்னன்’

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதில், சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த ‘தேர்தல் மன்னன்’ என்று அழைக்கப்படும் பத்மராஜன் (64) என்பவர் இன்று முதல் வேட்பாளராக, தேர்தல் அலுவலர் மணீஷிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இது இவர் தாக்கல் செய்துள்ள 247வது வேட்பு மனு ஆகும். இவர் கடைசியாக வயநாடு மக்களவை தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

News January 10, 2025

ஈமச்சடங்கு கெட்டப்பில் வந்த வேட்பாளர்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் இன்று (10-ம் தேதி) முதல் 17-ஆம் தேதி வரை பெறப்பட உள்ளது. இந்நிலையில் இன்று முதல் நாள்  கோவை சங்கராபுரத்தை சேர்ந்த நூர் முகமது என்பவர் தீச்சட்டி, சாவு மணி, பால் ஆகியவையுடன் வந்து  ‘தேர்தலில் பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி வேட்புமனு தாக்கல் செய்தார். 

News January 10, 2025

3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் இன்று (10-ம் தேதி) முதல் 17-ஆம் தேதி வரை பெறப்பட உள்ளது. இந்நிலையில் இன்று முதல் நாள் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றது. முதல் நாளான இன்று 3 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதில் தேர்தல் மன்னன் பத்மநாபன், நூர் முகம்மது, முன்னாள் ராணுவ வீரர் மதுர விநாயகம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

News January 10, 2025

தேர்தல் பணிக்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிக்காக வந்திருந்த நெடுஞ்சாலை துறை உதவியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைதுறை அலுவலக உதவியாளராக பணியாற்றும் சந்திரமோகன் தேர்தல் பணிக்காக மாநகராட்சி அலுவலகத்திற்குள் சந்திரமோகன் செல்ல முயன்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கிய சந்திரமோகனை மீட்டு மருத்துவமனைக்கு சென்றனர் சந்திரமோகன் மரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர் கூறினார்

error: Content is protected !!