Erode

News January 12, 2025

ஈரோட்டை காக்கும் பண்ணாரி அம்மன்

image

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாக சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. தமிழகம்-கர்நாடக மாநில எல்லையில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவில் காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு மூடப்படுகிறது. இங்கு தினந்தோறும் பூஜைகள் நடைபெறும். அமாவாசை, பௌர்ணமி, தமிழ் (ம) ஆங்கிலப் புத்தாண்டு, ஆடி மாதம், தீபாவளி, பொங்கல் போன்ற நாள்களில் திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

News January 12, 2025

காலை 7 மணிக்கு தொடங்கும் இடைத்தேர்தல்

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்.5 நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்று சரியாக காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு தேர்தல் நிறைவு பெறும். கடைசி நேரத்தில் வாக்களிக்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. 6 மணிக்கு பிறகு வாக்காளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 12, 2025

வருமானவரி சோதனை நிறைவு 

image

ஈரோட்டில் தனியார் கட்டுமான நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவன அலுவலகங்களில் ஜன.7 முதல் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. தற்போது சோதனை நிறைவு பெற்றது.

News January 12, 2025

நாளை வேட்புமனு தாக்கல் செய்யலாம்

image

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை(13.1.25) இரண்டாவது நாள் துவங்குகிறது. இடைத்தேர்தல் பிப்.5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு கடந்த 10ம் தேதி முதல் துவங்கியது. வேட்புமனு செய்ய கடைசி தேதி ஜன.17ஆகும். காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதுவரை 3 பேர் வேட்புமனு செய்துள்ளனர்.

News January 11, 2025

தமிழக அணியில் சென்னிமலை வீரர்

image

ஈரோடு, சென்னிமலை பாரதி நகரைச் சேர்ந்த கே கிஷோர் என்ற இளைஞர், 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணிக்காக தேர்வாகி விளையாடி வருகிறார். சென்னிமலையில் இருந்து முதல் முறையாக தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி உள்ள முதல் நபர் இவர் ஆவார். கிஷோர் முதல் போட்டியில் குஜராத்துக்கு எதிராக 55 ரன்கள் விளாசியுள்ளார்.

News January 11, 2025

ஈரோடு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளரின் தேர்தல் அனுபவம்

image

RK நகர் இடைத்தேர்தலில் பகுதி பொறுப்பாளராகவும், 2019 பாராளுமன்ற தேர்தல் சேலம் தொகுதி பொறுப்பாளராகவும், 2021 சட்டமன்ற தேர்தல் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராகவும், 2023 பாராளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதி பொறுப்பாளராகவும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராகவும், அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் முழுநேர தேர்தல் பணியிலும் வி.சி.சந்திரகுமார் ஈடுபட்டுள்ளார்.

News January 11, 2025

தேர்தலை புறக்கணித்த தேமுதிக

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்த, சில மணி நேரங்களில் தேமுதிகவும் தேர்தலைப் புறக்கணித்துள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, பாஜக, நாதக என மும்முனை போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 11, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு

image

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், ஆட்சி அதிகாரத்தை திமுக தவறாக பயன்படுத்தும் என்பதால் புறக்கணிப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

News January 11, 2025

ஈரோடு தேர்தலில் அதிமுக போட்டி?

image

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News January 11, 2025

ஈரோடு கிழக்கில் விஜயகாந்த் மகன் போட்டி?

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமான சந்திரகுமார் போட்டியிடுகிறார். இதனால், அவருக்கு எதிராக தங்கள் கட்சி வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று இபிஎஸ்-யிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாராம்.

error: Content is protected !!