Erode

News January 13, 2025

ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனை போட்டி

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாளை (ஜன.14) அறிவிக்கப்பட உள்ளார். அ.தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க., த.மா.கா. போன்ற எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்து உள்ளதால், இருமுனை போட்டி மட்டுமே நடக்கும் நிலை காணப்படுகிறது.

News January 13, 2025

நடிகர் அஜித்குமாருக்கு எம்எல்ஏ வாழ்த்து

image

துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில், 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அவருக்கு ‘ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ்’ விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், திரைப்பட நடிகர் அஜித்குமாருக்கும், அவரின் அணியினருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையயன் தெரிவித்துள்ளார்.

News January 13, 2025

வேட்பு மனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்குகிறது

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (ஜன.13) காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது. ஏற்கனவே 3 சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். திமுகவும், நாம் தமிழர் கட்சியும் 17-ல் மனுதாக்கல் செய்கின்றன. எனவே சுயே. வேட்பாளர்கள் மட்டும் இன்று மனுதாக்கல் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 12, 2025

ஈரோட்டில் நாளை இரண்டாம் நாள் மனுதக்கல்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு, இரண்டாம் நாள் (ஜன.13) வேட்பு மனு தாக்கல், நாளை நடைபெற உள்ளது. முதல் நாளான ஜனவரி 10 நடைபெற்றது. இதில் 3 சுயேட்சைகள் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், திமுக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. அதிமுக, பாஜக மற்றும் தேமுதிக கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 12, 2025

ஈரோடு: 2 நாட்கள் மது கடைகளுக்கு விடுமுறை

image

ஈரோடு மாவட்டத்தில், ஜனவரி 15 (திருவள்ளுவர் தினம்) மற்றும் ஜனவரி 26 (குடியரசு தினம்) ஆகிய இரு தினங்கள் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்புகள் ஆகியவை மேற்கண்ட இரு நாட்கள் மூடப்படும் என, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News January 12, 2025

ஈரோடு இடைத்தேர்தல் பணியில் 1,194 அலுவலர்கள்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக வாக்கு சாவடிகளுக்கு 284 முதன்மை அலுவலர்கள், 284 முதல் நிலை அலுவலர்கள், 284 இரண்டாம் நிலை அலுவலர்கள், 284 மூன்றாம் நிலை அலுவலர்கள், 58 நான்காம் நிலை அலுவலர்கள் என மொத்தம் 1,194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர் என. மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News January 12, 2025

இறுதி வேட்பாளர் பட்டியல் ஜன.20ல் வெளியீடு

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.17 நிறைவடைகிறது. 18ல் வேட்புமனு பரிசீலனை செய்யப்படுகிறது. ஜன.20 பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து இடைத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்று தெரியவரும். 2023 இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

News January 12, 2025

ஈரோடு: ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

image

ஈரோடு சூரம்பட்டி நேதாஜி வீதியை சேர்ந்த சுரேஷ்குமார் (39). நிதி நிறுவனம் வைத்து தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி பிரிந்து சென்ற பிறகு, மது அருந்திவிட்டு மனஉளைச்சலுடன் காணப்பட்ட அவர், ஈரோட்டுக்கும், தொட்டிபாளையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில், ரயிலில் அடிபட்டு, பிணமாக கிடந்தார். ஈரோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 12, 2025

ஈரோடு கிழக்கில் யார் அதிகம்? 

image

ஈரோடு மாவட்டத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 5ல் வெளியிடப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தினரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 636 வாக்காளர்கள் உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

News January 12, 2025

நாதக வேட்பாளர் பொங்கலுக்கு அறிவிப்பு

image

ஈரோடு இடைத்தேர்தல் வரும் பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொங்கல் அன்று வெளியிடப்படும் என சீமான் தெரிவித்துள்ளார். இத்தொகுதியில் அதிமுக, தேமுதிக போட்டியிடவில்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!