Erode

News February 13, 2025

தொண்டனாக கட்சிக்கு பாடுபடுவேன்: செங்கோட்டையன்

image

கோபி அருகே நல்லகவுண்டம் பாளையத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவரின் கட்டளையின் படியே இக்கூட்டம் நடைபெறுகிறது. என்னை யாரும் சிக்கவைக்க முடியாது. நான் என்றைக்குமே என்னைத் தலைவன் என்று சொன்னதில்லை. என்றைக்கும் நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் என்றார்.

News February 13, 2025

வேளாண் அடுக்கக திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு

image

ஈரோடு மாவட்ட விவசாயிகள் அனைவரும் அவரவர் கிராம நிர்வாக அலுவலகங்கள் அல்லது பஞ்சாயத்து அலுவலகங்களில் வரும் பிப்.,20ம் தேதி வரை நடைபெறும் ‘வேளாண் அடுக்கக’ திட்ட சிறப்பு முகாம்களில் உடனடியாக பதிவு செய்து, தனிப்பட்ட அடையாள எண்ணை பெறலாம். இதன் மூலம் விவசாயிகள் வருங்காலங்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களை பெற்று பயனடையலாம் என ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

434 காலிப்பணியிடங்கள்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும்

News February 13, 2025

சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டவர்

image

தொழில் நகரமான ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஏராளமான வெளிநாட்டினர் நுழைந்துள்ளனர். இவர்கள் எந்த வித ஆவணங்களும் இன்றி தமிழகத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனால், பெரிய ஆபத்து நிலவும் என பலர் கூறுகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருப்பூர், ஈரோட்டில் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

News February 12, 2025

முன்னாள் அமைச்சர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

image

முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவில் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகியாக அங்கம் வகிக்கிறார். இந்நிலையில், கோபி அருகே குள்ளம்பாளையத்தில் இவரின் தோட்டத்து வீட்டிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News February 12, 2025

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்

image

சித்தோடு வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால்(43) வெல்டிங் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி மேகலா (40), அப்பகுதியில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மதியம் தனது மனைவி வேலை செய்யும் இடத்திற்கு சென்று ,பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து பகுதியில் அறுத்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.

News February 12, 2025

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்

image

சித்தோடு வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால் வயது 43 வெல்டிங் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி மேகலா வயது 40, அப்பகுதியில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மதியம் தனது மனைவி வேலை செய்யும் இடத்திற்கு சென்று ,பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து பகுதியில் அறுத்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.

News February 11, 2025

சென்னிமலை முருகன் பற்றி தெரியுமா?

image

நாகத்திற்கும், வாயுதேவனுக்கும் ஏற்பட்ட சண்டையில், மேரு மலை உடைந்து. இதில் சிகரப் பகுதி, பூந்துறை என்ற இடத்தில் விழுந்தது. அந்த இடமே சென்னிமலை. இதற்கு, சிரிகிரி, புஷ்பகிரி, மகுடகிரி என்ற பெயர்களும் உண்டு. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இந்த கோயில், 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம். தீமைகளை விரட்டும், சர்வ வல்லமை கொண்ட கடவுளாக, இங்கு முருகன் வீற்றிருக்கிறார். இத்தலம் செவ்வாய் பரிகார சிறப்பு தலமாகும்.

News February 11, 2025

கடன் பெற விண்ணப்பிக்கலாம் 

image

ஈரோடு மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, டாம்கோ மூலம் தனி நபர் கடன், குழுக்களாக சிறு தொழில் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட கூட்டுறவு வங்கி நகர வங்கி தலைமையகத்தில் வரும் பிப்.,14 மற்றும் 17ஆம் தேதியும் லோன் மேளா நடைபெறுகிறது. கடன் பெற விருப்பமுள்ளோர் பயனடையலாம்.

News February 11, 2025

134 ஆக உயர்ந்த திமுக எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை

image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகும். அதில், சட்டப்பேரவைத் தலைவருடன் சேர்த்து திமுக உறுப்பினர்களின் பலம் 133ஆக இருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் வசமிருந்த ஈரோடு கிழக்கு தொகுதியானது தற்போது திமுக வசமாகியுள்ளது. இதையடுத்து, நேற்று சட்டமன்ற உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றதன் மூலம் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களின் பலம் 134ஆக உயர்ந்துள்ளது.

error: Content is protected !!