India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாநகராட்சியில் 2024 மற்றும் 2025 காண குடிநீர் வரி, சொத்து வரி, வீட்டு வரி நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும் போது, தினமும் ஒரு வார்டுக்கு ஒரு மொபைல் வாகனம் மூலம் வரி வசூல் செய்யப்படும் எனவும், அந்த வாகனத்திலேயே ரசீது வழங்கப்படும் எனவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் பிப்ரவரி 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும் தகவலுக்கு 8675412356, 9499055942 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 24 வது கொண்டை ஊசி வளைவில், தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கிச் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது, ஈச்சர் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அடி பள்ளத்தில் அந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்தவரை, கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சத்தியமங்கலம், குமாரபாளையம் குன்றின் மேல், அமைந்துள்ளது, புகழ்பெற்ற தவளகிரி தண்டாயுதபாணி கோயில். 500 ஆண்டுகளுக்கு முன்பு, துர்வாசகம் முனிவர், உருவம் இல்லாத சிலையாக, முருகனை, மேற்கு பார்த்து பிரதிஷ்டை செய்தாராம். தீமைகளை போக்கும் சர்வ வல்லமை கொண்ட கடவுளாக இங்கு முருகன் வீற்றிருப்பதால், திருமண தடை, சூனியம், செவ்வாய் தோஷம், போன்ற அனைத்து தடைகளும், முருகனை வழிபட்டால் பறந்தோடுமாம்.
ஈரோடு மாவட்டத்தில் வேளாண் அடுக்குகம் திட்டத்தில் இதுவரை 19,420 விவசாயிகள் பதிவு செய்திருப்பதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும், முறையாக விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு ‘வேளாண் அடுக்குகம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அடையாளஅட்டை மூலம் வேளாண்மை சார்ந்த பயிர் கடன்கள் வழங்கப்படும்.
டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் குண்டேரிப்பள்ளம் அணை அருகே தனியார் நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை மூடி சீல் வைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஆழ்குழாய் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்காத டி.என்.பாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு: ஈரோட்டில் இடைத்தேர்தல், பிரசாரத்தில் போது வெடிகுண்டு வீசுவதாக பேசிய வழக்கு தொடர்பாக வருகிற 20ம் தேதிக்குள் ஈரோடு போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகி விளக்கம் தர நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, ஈரோடு போலீசார் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று சம்மன் வழங்கி உள்ளது.
சென்னையில் நடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திஷா கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் நேற்று கோபியில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தபோது கடந்த ஆண்டு நடந்த கூட்டத்திலும் கலந்து கொண்டேன். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை தெரியப்படுத்த பங்கேற்றேன் என்றார்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.21 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தனியார் நிறுவனங்களில் செவிலியர், டெய்லர், கணினி ஆபரேட்டர், தட்டச்சர், டிரைவர் போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். எனவே வேலை வாய்ப்பு தேடுபவர்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.
கோவை – தன்பாத் (03680) வார சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பிப்.18 காலை 7.50 மணிக்கு கோவையிலிருந்து புறப்படவிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் 16 மணி நேரம் தாமதமாக இரவு 11.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த ரயில் 16 மணி நேரம் தாமதமாக ஈரோட்டுக்கு வந்து சேரும்.
Sorry, no posts matched your criteria.