Erode

News February 20, 2025

மன அமைதி தரும் திண்டல் முருகன்

image

ஈரோட்டில் அமைந்துள்ள பழமையான திண்டல் முருகன் கோவில் சோழர்களால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் புகழப்படும் 108 முருகன் கோவில்களில் இதுவும் ஒன்று. வேலாயுதசாமி எனும் முருகன் மூலவர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தைப்பூசம், கந்த சஷ்டி போன்ற திருவிழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன, மன அமைதி பெற பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசித்துவிட்டு செல்கின்றனர்

News February 20, 2025

புறவழி சாலை திட்ட பணிகள் விரைவில் துவங்க வாய்ப்பு

image

கோவையில்- சத்தியமங்கலம் புறவழி சாலை திட்டத்திற்கான பணிகளை விரைவில் துவங்க மாநில நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான நிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளது என்கிற அறிவிப்பு பொது தளங்களில் ஒரு சில நாட்களில் வெளியாகும் எனவும். இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக நில உரிமையாளர்களிடம் விரைவில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

News February 20, 2025

ஒன் ஸ்டாப் சென்டரில் பணி: உடனே விண்ணப்பிக்கவும் 

image

ஈரோடு மாவட்டத்தில் ஒன் ஸ்டாப் சென்டரில் உள்ள 4 பணியிடங்களுக்கு பிப்.25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வழக்குப்பணியாளர்கள் 2 போ், பாதுகாவலா்- 1, பல்நோக்கு பணியாளர்- 1 ஆகியப் பணியிடங்களுக்கு பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனர் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

News February 20, 2025

108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு 102 சேவையில் சுகாதார ஆலோசனை அதிகாரியாகவும், 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராகவும் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற 22ம் தேதி காலை 10 முதல் மதியம் 2 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனை டிபி ஹாலில் நடக்கிறது. அடிப்படை தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம் முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய 73388-94971, 8925941108 எண்களை தொடர்பு கொள்ளவும்.

News February 20, 2025

ஈரோட்டில் தேர்வு மையங்கள்

image

தமிழக முழுவதும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு அடுத்த மாதம் மார்ச் 3ஆம் தேதி தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 23,071 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவிகளின் விவரம் தேர்வு எண் மற்றும் முகப்பு சீட்டு அந்தந்த தேர்வு மையங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

News February 20, 2025

ஈரோடு அருகே விபத்து

image

ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரி புதூர் பகுதியில் நேற்று மாலை டெம்போவில் 15 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். அப்பொழுது அவ்வழியே வந்த பஸ் மீது, டெம்போ மோதியது. இதில் டெம்போவில் பயணம் செய்த 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 19, 2025

சென்னிமலை அருகே பயங்கர தீ விபத்து

image

சென்னிமலை அடுத்துள்ள குமராபுரி பகுதியில், முகாசிப்பிடாரியூர் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு செயல்படுகிறது. அந்த குப்பை கிடங்கில், இரவு 7:30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து உடனடியாக சென்னிமலை தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் சிகரெட் துண்டால் தீ பற்றியதாக தெரிகிறது.

News February 19, 2025

குழந்தை திருமண புகார் தெரிவிக்க எண் அறிமுகம்

image

ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது, இன்னும், ஒரு சில கிராமங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் படி, குழந்தை திருமணம் குறித்து பொதுமக்கள், 89031 67788 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.குழந்தை திருமணம் செய்யும் நபருக்கு, 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்றார்.

News February 19, 2025

உதவித் தொகை: தொழில் பழகுநர் பயிற்சி

image

ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த10, +2, டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்தவர்கள் நாளை பிப்.19ல் ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், பல முன்னணி நிறுவனங்கள் பங்கு பெறும் அப்ரண்டிஸ்சிப் பயிற்சிக்கான ஆட்கள் தேர்வு மற்றும் முகாம் நடைபெறுகிறது. ஓராண்டு பயிற்சியின் போது உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக தொலைபேசி: 8610492323 ல் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

News February 19, 2025

ஈரோட்டில் வாகனங்கள் ஏலம் 

image

ஈரோடு அடுத்த ஆனைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில், நாளை மறுநாள் (பிப்.,21) ஈரோட்டில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுப்பவர்கள் இன்று மற்றும் நாளை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாகனங்களை நேரில் பார்வையிடலாம். மேலும் தகவலுக்கு 9498174836, 9442900373, 9976057118 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!