Erode

News February 22, 2025

வெறி நாய் கடிக்கு இரு மாதங்களில் 750 பேருக்கு சிகிச்சை

image

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெறிநாய்க்கடிகளின் மூலம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 750 பேருக்கு மேல் ஈரோடு அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்றுச் சென்றதாகவும், அதில் 38 பேர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் அரசு டாக்டர் தெரிவித்தனர். வெறி நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

News February 22, 2025

சத்தி: கத்திமுனையில் லாரி கிளீனரிடம் பணம் பறிப்பு

image

சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 39). லாரி கிளீனர். இவர் நேற்று இரவு சம்பளம் வாங்கிவிட்டு ஊருக்கு செல்வதற்கு பண்ணாரி அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வெங்கடேஸ்வரனிடம் கத்தியை காட்டி பணம் கேட்டுள்ளனர். பயந்து போய் 2000 கொடுத்துள்ளார். பின் திருடன் என்று கத்த அருகிலிருந்தவர்கள் பிடித்து, இருவரையும் போலீசிடம் ஒப்படைத்தனர்.

News February 22, 2025

மோசடி நிறுவன சொத்து வரும் 26, 27ல் ஏலம்

image

ஈரோடு: கோவை சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்ட ஈரோடு தனியார் நிறுவனம், பெருந்துறை சுசி ஈமு பார்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவன அசையா சொத்துக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26, 27ல் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது. விருப்பமுள்ளோர் விண்ணப்பித்து ஏலத்தில் பங்கேற்கலாம்.

News February 22, 2025

இறந்த அரசு ஊழியர் வாரிசுகளுக்கு வேலை: கயல்விழி செல்வராஜ் 

image

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அமைந்துள்ள அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் வாரிசுகள் 4000 பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

News February 22, 2025

மாத்தூர் அருகே பஸ் கண்டக்டர் கைது

image

அந்தியூர், மாத்தூரை சேர்ந்தவர் பூவிழி கண்ணன்(28). தனியார் பஸ் கண்டக்டர். ஈரோட்டில் இருந்து தளவாய்பேட்டை வரை பஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பஸ்சில் வந்த, பவானியை சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து மானவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் படி, போலீசார் அவரை கைது செய்தனர்.

News February 22, 2025

My v3ads-ல் முதலீடு செய்தவரா நீங்கள்?

image

கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் “My v3ads” நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர். எனவே, ஈரோடு மக்களே இதில் ஏமாற்றம் அடைந்திருந்தால் உடனே புகார் அளிக்கலாம்.

News February 22, 2025

தொழில் தொடங்க மானிய கடன்: கலெக்டர்

image

ஈரோடு கலெக்டர்  ராஜகோபால் சுன்கரா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் வங்கிகள் மூலம் மானியத்தில் கடன் வழங்கப்பட உள்ளது. கடன் தொகையில் 30% மூலதன மானியம், 3% வட்டி மானியம் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ (அ) 0424-2263227 என்ற எண்ணை அழைக்கலாம்.

News February 22, 2025

சத்தியமங்கலம் மாணவி குவியும் பாராட்டு

image

சத்தியமங்கலம் வட்டம், சதுமுகை ஊராட்சி, சின்னட்டிபாளையம் – தொன்னேரங்கனூர் கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் மகள் C.சினேகா. இவர் சீனியர் நேஷனல் கபடி போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டு (24-25) ஆண்டுக்கான ஈரான் நாட்டில் நடைபெறும் ஆசிய பெண்கள் சாம்பியன்ஸ் பயிற்சி கபாடி முகாமில் கலந்து கொள்ள உள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

News February 22, 2025

திமுக கவுன்சிலரை கண்டித்து காலவரையற்ற போராட்டம்

image

புஞ்சைபுளியம்பட்டி தினசரி காய்கறி வியாபாரிகள் திமுக கவுன்சிலர் அத்துமீறி செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் மற் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் திமுக கவுன்சிலரை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என  தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

News February 21, 2025

சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

image

ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் புகைப்படத்தை , கோவையில் பொறியாளராக பணிபுரிந்து வந்த சுரேந்தர் (24) என்பவர் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சுரேந்தரை பிடித்து அவர் மீது போக்சோ, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்பட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

error: Content is protected !!