India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு,தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில், 108 தேர்வு மையங்களில் 22,424 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இன்று மொழி பாடத்தேர்வு நடக்கிறது. ஈரோடு, கோபி, அந்தியூர், தாளவாடி ஆகிய நான்கு இடங்களில் தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 108 தேர்வு மையங்களுக்கும் தலா ஒருவர் என, 108 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்கள்.
ஈரோடு டவுன் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கஸ்தூரி ரங்கநாதர் திருக்கோயில், 7 கலசங்களை கொண்டு பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. இத்தலத்தில் பெருமாளின் காவலர்களாக ஜெயன் ,விஜயன் இருவரும் கருவறைக்கு உள்ளேயே தாழ்பணிந்து நிற்பதை காணலாம்.இந்த கோயிலில் வழிபாடு செய்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும், கோபம் குணம் கொண்டவர்களின் கோபத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது.
ஈரோட்டில், வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் சீமானுக்கு சம்மன் வழங்க 3வது நாளாக ஈரோடு போலீசார் நீலாங்கரையில் முகாமிட்டுள்ளனர். ஈரோடு தொகுதி தேர்தல் பரப்புரையில், “வெடிகுண்டு வீசுவேன் என வன்முறையை தூண்டும் வகையில் சீமான் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் தரமான பருத்தி விதை விற்பனை செய்வதை உறுதி செய்ய,156 பருத்தி விதை மாதிரிகள் முளைப்பு திறன் பரிசோதனைக்கும்,97 மாதிரிகள் இன தூய்மை மற்றும் 246 விதை மாதிரிகள், பி.டி.மரபணு பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டது.தரமற்ற விதைகளை விற்பனை செய்பவர்கள் மீது இன்றியமையா பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கபடும் என்று ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி எச்சரித்துள்ளர்
ஈரோடு கால்நடை துணை, இணை இயக்குனர் அலுவலக அலுவலர்கள் கூறியதாவது: அனிமல் வெல்பேர் போர்டு விதிப்படியே நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு முறையான அறுவை சிகிச்சை கூடம், அரசு அனுமதி பெற்று ஈரோடு மாநகராட்சி பகுதியில் இயங்குகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில், 2024 ஜனவரி முதல் தற்போது வரை, 6,600 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு 108 தேர்வு மையங்களை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 23,071 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்களும் எழுத உள்ளனர். இதில், பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு மாவட்டத்தில் மொத்தம் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு வேளாண் அதிகாரிகள் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு, 733.44 மி.மீ., நடப்பாண்டு கடந்த, 28 வரை, 7.52 மி.மீ., பெய்துள்ளது. பல்வேறு நிலைகளில் பாசனப்பணி நடந்து வரும் நிலையில், வேளாண் விரிவாக்க மையங்களில் வினியோகம் செய்வதற்காக நெல் விதை, 261.4 டன், சிறுதானியங்கள், 28 டன், பயறு வகை, 13 டன், எண்ணெய் வித்துக்கள், 49 டன் என, 351.4 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாநகர் மட்டுமின்றி கிராமங்களிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள், மனிதா்கள், ஆடு, மாடு, கோழிகளை கடிக்கின்றன. ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் நாய் கடிக்காக 550 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பிப்ரவரி மாதம் 230 பேர் நாய் கடிக்கான சிகிச்சை பெற்றுள்ளனர். மொத்தம் 780 பேர். இங்கு போதிய எண்ணிக்கையில் நாய் கடிக்கான மருந்துகள் உள்ளன என்றனர்.
ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த பணிகள் முடிந்த பிறகு குடிநீர் சீராக வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி துணை ஆணையாளர் தனலட்சுமி அறிவித்துள்ளார்.
ஈரோட்டில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 15ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்க முன்பதிவு கட்டாயம். 0424 2275860, 9499055942 தொலைபேசி எண் மூலம் பதிவுசெய்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.