India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் அமைச்சர் கோவி செழியன், அமைச்சர் முத்துசாமி ஆகியோர் நேற்று சிக்கய்யா நாயக்கர் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோவி செழியன் பேசுகையில், கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை வைத்து உள்ளனர். இந்நிலையில், முதலமைச்சர் ஒப்புதல் பெற்று ஈரோட்டில் கலைஞர் பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோவை அனுவாவியில் மலையின் மையப் பகுதியில், இயற்கை எழிலுடன் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு திருமணத் தடை உள்ளவர்கள் சாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப் பாதையில் இரவு நேரங்களில் கொண்டை ஊசி வளைவுகளில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால். வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகள் பாதுகாக்குமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு, பிளஸ் 1 பொதுத்தேர்வினை 108 மையங்களில் 24,257 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழ்நாட்டில் மார்ச் 5ல் தொடங்கிய இத்தேர்வு வருகிற 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வினை ஈரோடு மாவட்டத்தில் 223 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 23,877 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்கள் 380 பேர் என மொத்தம் 24,257 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
சிவன் திரிபுரத்தை அழிக்க, மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது, அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி, அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு வந்து குடிகொண்டாரம். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும், சிவன்மலை முருகனை வழிபட்டால் கிடைக்கும்.
கோயம்புத்தூர் டு சேலம் பைபாஸ் சாலையில் உள்ள விஜயமங்கலம் டோல்கேட் அருகே இன்று ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பேருந்து சென்று கொண்டு இருக்குபோது, குறுக்கே பைக் வந்ததால் இவ்விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் வந்தவர் சம்பவயிடத்திலே உயிரிழந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.
தமிழகத்தில் ஈரோட்டில் 102 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நடப்பாண்டில் அதிகபட்ச ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. சேலத்தில் 100, கரூர் பரமத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. கடும் வெயிலால் பல்வேறு பாதிப்புகள் வரும் என்பதால் மக்களே வெயில் காலத்தில் வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள். (share பண்ணுங்க)
ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான கிழ்காணும் வணிக வளாகங்களில் காலியாக உள்ள கடைகளுக்கான முன் பொது ஏலம் மற்றும் பொது ஏலம் கீழ்கண்ட தேதிகளில் நடைபெறவுள்ளது. சோலார் வணிக வளாகம் மார்ச் 5ம் தேதியும், கனிமார்க்கெட் (பிஎஸ் பார்க்)வணிகவளாகம், காளைமாட்டுசிலை வணிகவளாகம், நேதாஜி வணிகவளாகம் மார்ச் 7ம் தேதியும், மத்தியபேருந்து வணிகவளாகம் மார்ச் 12ம் தேதியும் ஏலம் நடைபெறவுள்ளது.
ஈரோடில் சிறு தொழில் கடன் திட்டங்களின் கீழ், கடன் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறமுடியும். அதன்படி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – சிவகிரி கிளையில் இன்று லோன் மேளா நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று(மார்ச்.5) தொடங்கி வருகிற 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் 23,877 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்களாக 380 பேரும் எழுத உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், விபத்தினால் பாதிப்படைந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வசதியாக ஸ்கிரைப் 412 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.