India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாநகராட்சியில் 2024-2025ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரிகளை வருகின்ற மார்ச்.31 வசூலிக்க உத்தரவிடப்பட்டது. இதில், வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று வரிகளை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். இன்று (24) காலை சம்பத் நகர் மாநகராட்சி கிளை அலுவலகத்தில் பொதுமக்கள் வரிசையில் நின்று வரிகளை செலுத்தி சென்றனர்.
ஈரோடு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிங்க இங்கு கிளிக் செய்யவும். மேலும், Share பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்று (மார்ச்.24) கடைசி நாள் ஆகும்.
தமிழ்நாட்டில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்திலும் நள்ளிரவு இடி, மின்னலுடன் மழை பெய்யது. இதனால், அப்பகுதியில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும், இன்றும் பல்வேறு பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. உங்க ஊர்ல மழை பெய்தால், கமெண்ட் பண்ணுங்க. SHARE பண்ணுங்க
அந்தியூரில் இருந்து, ஈரோடு செல்வதற்காக, அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பெண் ஒருவர், தனது குழந்தையுடன் அமர்ந்திருந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த பெண், குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து, அவர் வைத்திருந்த ரூ.50,000 பணத்தை திருடியுள்ளார். இதனை கண்ட சக பயணிகள், அந்த பெண்ணை பிடித்து, அந்தியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்தோடு, சூரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் வயது 36 தொழிலாளி, இவர் நேற்று மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் சென்று, இறந்து போன பரமேஸ்வரன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதனால் இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 16 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் Staff Nurse, Hospital Worker உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இதில் வேலைக்கு ஏற்றார்போல், 12ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு நாளைக்குள் (24ஆம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு <
▶️பவானிசாகர் அணை ▶️கொடிவேரி அணை ▶️பண்ணாரி அம்மன் கோவில் ▶️சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ▶️வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ▶️பெருமாள் மலை(டிரெக்கிங் செய்ய ஏற்றது)▶️ பாரியூர் அம்மன் கோவில் ▶️காளிங்கராயன் அணை ▶️ சென்னிமலை முருகன் கோவில்▶️ ஈரோட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள ஈரோடு அரசு அருங்காட்சியகம். இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி ஒரு சின்ன ட்ரிப் பிளான் பண்ணுங்க
ஈரோடு கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாவட்டத்தின் சில பகுதிகளில் காலை7 மணி வரை, கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாவட்டத்தின் சில பகுதிகளில், மாலை 6 மணி வரை, கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் மார்ச்.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்று ஈரோட்டில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.