Erode

News March 27, 2025

ஈரோடு மக்களின் கவனத்திற்கு

image

கோடை வெயில் வழக்கத்தை விடவும் சற்று உக்கிரமாக தொடங்கி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு பாதிப்பு மிக அதிகமாக இருக்கலாம் என வானிலை ஆய்வு மையங்கள் அறிவித்துள்ளன. பொதுவாக ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. எனவே ஏப்ரல், மே மாதங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். ஈரோடு மக்களே தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். (Share பண்ணுங்க)

News March 26, 2025

பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி

image

சித்தோடு கனரா‌ வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, “பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி, “வருகின்ற 07-04-2025 முதல் 15-05-2025 வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம். பயிற்சியின் முடிவில் Govt சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். முன்பதிவிற்கு 8778323213, 7200650604, 0424-2400338.

News March 26, 2025

ஈரோடு: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

ஈரோட்டில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

News March 26, 2025

அக்னிவீர் ஆட்சேர்ப்பு பதிவு தொடக்கம்

image

கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலர் கர்னல் அன்சூல் வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றார். உடனே SHARE பண்ணுங்க

News March 26, 2025

ஈரோடு அருகே விபத்து: இளம்பெண் பலி!

image

ஈரோடு, சத்தியமங்கலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர், நேற்று குடும்பத்துடன் காரில், ஓதிமலை முருகன் கோயிலுக்கு சென்றுள்ளனர். பவானிசாகர், சிங்கராயன் கரடு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர வனப்பகுதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த விவேகா என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சீனிவாசன் உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News March 26, 2025

ஈரோடு: சட்டவிரோதமாக மது விற்ற நபர் கைது

image

ஈரோடு, சத்தியமங்கலம், ஜெய்சக்திமேடு பகுதியில், கோபி மதுவிலக்கு பிரிவு, காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருலோகசந்தர் தலைமையிலான காவல்துறையினர், நேற்று ரோந்து சென்றனர். அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த, சத்தியமங்கலம் நேரு நகரைச் சேர்ந்த, குணசேகரன் (29) என்பவரை, காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News March 25, 2025

ஈரோட்டில் பரபரப்பு: ஒரே நாளில் 7 ரவுடிகள் கைது

image

ஈரோட்டில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, எஸ்.பி. ஜவகர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், ஈரோடு வடக்கு, தெற்கு, நகர காவல் நிலையங்களில், குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள, விக்கி (எ) விக்னேஷ், கோகுல்நாத் (எ) சொட்டை கார்த்தி, சந்திரபிரகாஷ், அணைக்கட்டு பூபதி, காளியப்பன், நிகாத், சரவணன் ஆகிய 7 பேர், நேற்று ஒரேநாளில் கைது செய்யப்பட்டனர்.

News March 25, 2025

ஈரோடு மாவட்ட எஸ்பி ஆக ஏ. சுஜாதா நியமனம்

image

ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக, திருப்பூரில் காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு,வடக்கு பணியில் உள்ள ஏ.சுஜாதா, பணியமர்த்தப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக தற்போது உள்ள ஜி.ஜவகர், சென்னையின் சிபி-சிஐடி காவல்துறையின், வடக்கு மண்டல காவல்துறை கண்காணிப்பாளராக, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News March 25, 2025

ஈரோட்டில் சிறுவன் மீது வழக்கு பதிவு

image

ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், 17 வயது சிறுவனுக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டுள்ளனர். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் தாய் கொடுமுடி போலீசில் புகார் அளித்த நிலையில், 17 வயது சிறுவன் மீது போக்கு சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 25, 2025

மக்களே கட்டாயம் மிஸ் பண்ணாதீங்க

image

ஈரோடு: AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். 

error: Content is protected !!