Erode

News April 22, 2025

ஈரோடு: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 139 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை <>www.icds.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

News April 22, 2025

ஈரோட்டில் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 25.04.2025 அன்று காலை 10 மணி முதல், ஐடிஐ வளாகம் அருகில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நெறிவழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளவும். இதை SHARE பண்ணுங்க.

News April 22, 2025

ஈரோடு: நீரில் மூழ்கி சிறுவன் பலி!

image

கோவை, காரமடை தாயனூரை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர், தனது 3 வயது பேரனுடன் நேற்று, ஈரோடு, புளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் கலியுக சித்தர் பீடத்திற்கு வந்துள்ளார். பேரனுடன், சித்தர் பீடத்தில் உள்ள சிலைகளுக்கு முன்பு அமர்ந்திருந்த போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், 4 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 21, 2025

தாளவாடி: கணவனை கொன்ற மனைவி!  

image

தாளவாடி, மல்லன்குழியை சேர்ந்தவர் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மல்லன்குழிக்கு நேற்று வந்த தங்கவேலு, தனது இரு மகன்களையும் அழைத்துச் செல்வதாக ரேவதியிடம் கூறியுள்ளாா். இதில் இருவருக்கும் சண்டை வர ரேவதி கல்லை தங்கவேல் தலையில் போட்டு கொன்றுள்ளார். தாளவாடி போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 21, 2025

தாளவாடி: கணவனை கொன்ற மனைவி!  

image

தாளவாடி, மல்லன்குழியை சேர்ந்தவர் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மல்லன்குழிக்கு நேற்று வந்த தங்கவேலு, தனது இரு மகன்களையும் அழைத்துச் செல்வதாக ரேவதியிடம் கூறியுள்ளாா். இதில் இருவருக்கும் சண்டை வர ரேவதி கல்லை தங்கவேல் தலையில் போட்டு கொன்றுள்ளார். தாளவாடி போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 21, 2025

ஈரோடு மாநகராட்சி (ம) நகராட்சி ஆணையர் எண்கள்

image

▶️ஈரோடு மாநகராட்சி ஆணையர் 0424-2258312. ▶️ பவானி நகராட்சி ஆணையர் 04256-230556. ▶️ கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையர் 04285-222159. ▶️சத்தியமங்கலம் நகராட்சி ஆணையர் 04295-220513. ▶️ புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஆணையர் 04295-267061. மக்களே, இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க.

News April 21, 2025

ஈரோடு: கடன் பிரச்சனையை தீர்க்கும் கால பைரவர்!

image

ஈரோடு ஆவல்பூந்துறை, ராட்டை சுற்றிபாளையத்தில், 39 அடி உயர பிரமாண்ட சிலையுடன் கூடிய, கால பைரவர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 21, 2025

ஈரோடு: மயங்கி விழுந்த கட்டிட தொழிலாளி பலி!

image

ஈரோடு, அத்தாணி அருள்வாடிபுதூரைச் சேர்ந்தவர் முருகன் (55) கட்டிட தொழிலாளியான இவர் நேற்று மாலை பைக்கில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து, உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2025

தாளவாடி: லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் சஸ்பெண்ட்

image

தாளவாடி அருகே உள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்வாரிய ஊழியர் மணிகண்டன் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோ குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் வயர்மேன் மணிகண்டன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக  தாளவாடி மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 20, 2025

ஈரோடு: ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு, நலவாரியங்களில் பதிவு பெற்ற 60வயது நிறைவடைந்த 11,000 மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் ஆயுள் சான்றை, உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 2025-26-ஆம் ஆண்டுக்காக ஆண்டு ஆயுள் சான்றை இந்த <>லிங்க்<<>> மூலம், உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

error: Content is protected !!