India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், அத்திக்கடவு-அவிநாசி திட்ட முன்னேற்ற நிலை தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். இத்திட்டத்தினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இத்திட்டம் தொடர்பாக விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கை அத்திக்கடவு-அவிநாசி திட்டம். அதிமுக ஆட்சியில் ரூ.1,652 கோடியில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 1,045 குளங்களும், 24,468 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும். ஆனால், தற்போது வரை இத்திட்டம் 93% பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திட்டம் எப்போது முழுமை பெறும் என கொங்கு மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் அருகே நிவேஷ் மற்றும் ஹரி ஆகிய இருவரும் தங்களது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றபோது, எதிரில் வந்த ஜீப் மீது நேருக்கு நேர் மோதினார்கள். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள். வாகனத்தை ஓட்டி வந்த ஹரி ஜீப் மீது மோதி, மேலே பறந்து முன் பகுதியில் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஹரி உயிரிழந்தார்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், ஈரோடு நண்பர்களே நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, ஈரோட்டில் உள்ள 7,43,181 ரேஷன் அட்டை தாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.
அறச்சலூர் அடுத்த ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219வது நினைவு நாளான இன்று ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ செங்கோட்டையன், கே .சி.கருப்பணன் எஸ்.பி.வேலுமணி, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், மயில் (எ) சுப்பிரமணி, கதிர்வேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அறச்சலூர் அருகே ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினத்தையொட்டி, இன்று அவரது சிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, நிர்வாகிகள் முருகானந்தம், ஜி.கே.நாகராஜன், வேதானந்தம் பங்கேற்றனர்.
➤ஈரோட்டில் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். ➤நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல். ➤வல்வில்ஓரி பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். ➤ஈரோடு மாவட்டத்தில் ஆடிபெருக்கை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஈரோடு வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தில், நடப்பு ஆடிப்பட்டத்துக்கு பயிரிட ஏற்ற காய்கறிகள் மற்றும் கீரை வகைகளின் விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் கத்திரி, வெண்டை, பாகற்காய், புடலை, மிளகாய், முருங்கை மற்றும் செங்கீரை, அரைக்கீரை, பாலக்கீரை விதைகளை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என ஈரோடு வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வினோதினி தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் 4 பேர் உடல் தற்போது மீட்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உடலை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.