India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 77 கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான வேளாண் கருவிகள் மற்றும் வாகனங்கள் குறைந்த வாடகையில் வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளன. எனவே விவசாயிகள் https://rcs.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்கள் அருகில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை (ஆகஸ்ட் 15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுநிதி செலவினம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம், ஆகியன கிராம ஊராட்சிகள் மூலம் தெரிவிக்கப்படும் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி மக்கள் அதிகம் கூடும் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். அந்த வகையில் ஈரோடு போலீசார் ஈரோடு ரயில் நிலைய நடைமேடை, ரயில்கள், பார்சல் அலுவலகம், வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் பயணிகளின் உடைமைகள் ஆகியவற்றை சோதனை செய்தனர். மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஈரோடு ரயில் நிலையத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு வந்த ரயில்களில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளின் உடைமைகளை
சோதனை செய்த பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் 42 காவல் உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளர்கள் 42 பேரை பணி இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 15), ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். மேலும் மேற்கூறிய தினத்தில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிபேட்டை மற்றும் சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கு இடையே காவிரி ஆற்றில் பயணிகள் படகு போக்குவரத்து உள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தற்போது 36,000 கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் பாதுகாப்பு கருதி விசை படகு போக்குவரத்து இன்று முதல் தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
➤அந்தியூர் அருகே மினிபேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ➤ஈரோடு மாவட்ட பாமக கட்சி செயலாளராக இருந்து கிருஷ்ணமூர்த்தி என்பவரை பதவி நீக்கம் செய்து அக்கட்சியின் நிறுவனர் உத்தரவிட்டுள்ளார். ➤தாளவாடியில் ஒற்றை யானை சாலையில் உலா வருவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ➤ஈரோடு மாவட்டத்திற்கு இன்று இரவு மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு, அந்தியூர் அடுத்த குருவரெட்டியூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மினி பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது, குருவரெட்டியூர் சனி சந்தை பகுதியில் மினி பேருந்து செல்லும் போது எதிரே வந்த லாரி மோதியதில் பேருந்தில் பயணித்த 8-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளராக வெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முதல் அப்பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் பவானி, அந்தியூர் தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய செயலாளர் விரைவில் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார் என பாமக தலைமை நிலைய சார்பில் அக்கட்சி நிறுவனர் ச.இராமதாஸ் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.