Erode

News August 17, 2024

அத்திக்கடவு அவினாசி திட்டம்: வரவேற்ற அமைச்சர்கள்

image

ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ரூ.1916.41 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் முத்துச்சாமி, சாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாஜலம், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், கைதட்டி வரவேற்றனர்.

News August 17, 2024

அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடக்கம்

image

ரூ.1,919 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை சற்றுமுன் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன்மூலம் ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு நனவாகியுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 3 மாவட்டங்களில் 74 ஏரிகள், 971 குளம் குட்டைகள் என 1,045 நீர்நிலைகளை நிரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; 24,468 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

News August 17, 2024

ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை

image

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, கோபி, பெருந்துறை என மொத்தம் 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட் உள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 19) ஆவணி அவிட்டம் மற்றும் ரக்ஷாபந்தனை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆகஸ்ட் 20 முதல் வழக்கம்போல மஞ்சள் ஏலம் நடைபெறும் என ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார்.

News August 17, 2024

ஈரோடு: 60 ஆண்டு கனவு இன்று நனவாகிறது!

image

ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். பவானி நீரேற்று நிலையப் பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தால் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24,450 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

News August 17, 2024

சென்னிமலையில் 152 பேருக்கு நலத்திட்ட உதவி

image

சென்னிமலை அம்மன் காட்டேஜ் பசுவபட்டியில் இன்று நடந்த விழாவில் 47 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், 105 ஊரகத் தொகுப்பு வீடுகளை சீரமைக்கும் பணிக்கான ஆணைகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். இவ்விழாவில் ஈரோடு எம்.பி., பிரகாஷ் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட கவுன்சிலர் எஸ் ஆர் எஸ் செல்வம், யூனியன் சேர்மன் காயத்ரி இளங்கோ கலந்து கொண்டனர்.

News August 16, 2024

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் 

image

ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே ஈரோடு நகர் முழுவதும், வீரப்பன்சத்திரம், பெரியவலக, பாப்பாத்திகாடு, நாராயணவலசு , கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை, மாணிக்கம்பாளையம், சத்தி சாலை, நேதாஜி சாலை, இடையன்காட்டு வலசு, முனிசிபல் காலனி பகுதிகளில் நாளை(17.8.24) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளனர்.

News August 16, 2024

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் 

image

ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே ஈரோடு நகர் முழுவதும், வீரப்பன்சத்திரம், பெரியவலக, பாப்பாத்திகாடு, நாராயணவலசு , கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை, மாணிக்கம்பாளையம், சத்தி சாலை, நேதாஜி சாலை, இடையன்காட்டு வலசு, முனிசிபல் காலனி பகுதிகளில் நாளை(17.8.24) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளனர்.

News August 16, 2024

ஈரோட்டில் 42 மாதங்களில் 17,000 பெண்கள் கருக்கலைப்பு

image

ஈரோட்டில் கடந்த 42 மாதங்களில் 17,067 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 2021ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2024ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்யப்பட்ட விவரங்களை, தனியார் தொலைக்காட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது. இதில், ஈரோடு 3ஆம் இடத்தில் உள்ளது.

News August 16, 2024

ஈரோட்டில் கனமழைக்கு வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையால் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 16, 2024

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

image

கொல்கத்தாவில் நடந்த பெண் மருத்துவர் கொலை தொடர்பாக நாளை காலை 6 மணியிலிருந்து 24 மணி நேரம் நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்ய தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் (TNGDA) மாநில செயற்குழு அவசரமாக இன்று காலை 8 மணி அளவில் காணொளி வாயிலாக கூட்டப்பட்டது. இதில் மாநில தலைவர் கே.செந்தில் தலைமை வகித்தார்.

error: Content is protected !!