Erode

News August 18, 2024

ஈரோடு இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ சூரியம்பாளையம், பெரியாண்டிபாளையம், சிப்காட் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை
➤கீழ்மாவல்லத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 7வயது சிறுமி உயிரிழப்பு
➤கோபி அருகே மண்ணெண்ணெய் ஊற்றி செவிலியர் தற்கொலை
➤ஈரோட்டிற்கு நாளை கன மழை எச்சரிக்கை
➤பவானிசாகர் அணை நீர்வரத்து சரிவு
➤ஈரோட்டில் போலி கரன்சி நைஜீரியா வாலிபர் கைது

News August 18, 2024

ஈரோட்டிற்கு நாளை கன மழை எச்சரிக்கை

image

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை சில இடங்களில் கனமழை, ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில், நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மித மான மழையும், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2024

கோபி அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை

image

கோபி அருகே கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சூரியபிரபா (23). நர்சிங் படிப்பு முடித்துவிட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தனக்குத்தானே மேலே ஊற்றி தீ பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 18, 2024

வதந்தியை நம்பி வந்து ஏமாற்றமடைந்த பெண்கள்

image

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்க நேற்று (17ஆம் தேதி), 19 மற்றும் 20ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவியது. எனவே நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பெண்களை பணியில் இருந்த காவலர்கள் முகாம் எதுவும் நடைபெறவில்லை என திருப்பி அனுப்பினர். பின் சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறு என்று அறிவிப்பு வைக்கப்பட்டது.

News August 18, 2024

தண்ணீர் தொட்டியில் விழுந்து 7வயது சிறுமி உயிரிழப்பு 

image

தாளவாடி அடுத்த ஆசனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்மாவல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேவன். இவரது மகள் அகல்யா(7) நேற்று மாலை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து குழந்தையை காணாமல் பெற்றோர்கள் தேடிய போது அருகில் இருந்த தண்ணீர் தொட்டியை விழுந்து உயிர் இழந்தது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

News August 18, 2024

நாளை இப்பகுதியில் மின்தடை

image

ஈரோடு: சூரியம்பாளையம், பெரியாண்டிபாளையம், சிப்காட் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(19.8.24) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், இப்பகுதியின் கீழ் உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 17, 2024

ஈரோடு இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு நாளை மறுநாள் விடுமுறை
➤ரூ.1,919 கோடி அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
➤முதல்வர் கோப்பை போட்டி, ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் தகவல்
➤ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாட்ஸ்அப் சேனல் https://whatsapp.com/channel/0029Va706tD
➤ஈரோட்டில் 500 மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்

News August 17, 2024

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாட்ஸ்அப் சேனல்

image

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசின் திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் பொது சேவை தகவல்களை பொது மக்கள் அறிந்திட ‘வாட்ஸ் அப் சேனல்’ தொடங்கப்பட்டுள்ளது. எனவே ஈரோடு மாவட்ட மக்கள்<> https://whatsapp.com/channel/0029Va706tDJ93we06DBga44<<>> (District Collector Erode) என்ற லிங்க் மூலம் வாட்ஸ்அப் சேனலில் இணைந்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News August 17, 2024

ஈரோடு: 500 மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்

image

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஈரோட்டில் 500 மருத்துவமனையில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பை செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன போன்ற 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

News August 17, 2024

முதல்வர் கோப்பை போட்டி: ஈரோடு ஆட்சியர் தகவல்

image

தமிழ்நாட்டில், நடப்பாண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 5 பிரிவுகளில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்கான முன்பதிவை அமைச்சர் உதயநிதி, கடந்த 4ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ளவர்கள் ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!