India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்தார். இதனையடுத்து ஈரோடு, அந்தியூரில் விஜய் ரசிகர் மன்றத்தினர் மற்றும் தமிழக வெற்றி கழகம் இணைந்து கட்சியின் கொடியை அறிமுகம் செய்தனர். இதனையடுத்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கொடியினை பிடித்துக் கொண்டு ரவுண்டானா பகுதியில் ஊர்வலமாக வந்தனர்.
ஈரோடு, கோபி அடுத்த டி.என்.பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் நடந்த வெடி விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். எனவே கல்குவாரி உரிமையாளரான ஈஸ்வரி, அவரது கணவர் லோகநாதன் தலைமறைவாகினர். இதுபற்றி பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதன், ஈஸ்வரியை தேடி வந்தனர். இந்நிலையில் லோகநாதன், ஈஸ்வரி, கல்குவாரி மேலாளர் செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி இலவச பயிற்சி வகுப்பு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சியில் சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவா்கள் 0424-2400338, 8778323213 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடங்கிய 5 நாள்களில், சத்தியமங்கலம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் குழாயின் ஏர்வால்வில் உடைப்பு ஏற்பட்டது. இதில் தண்ணீர் பீறிட்டு வெளியேறிய போது, அவ்வழியாக பைக்கில் சென்ற 2 பேர் தண்ணீரில் வழுக்கி விழுந்து நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதனால், பைக்கில் சென்ற 2 பேர் காயமடைந்தனர். எனவே, குழாய் உடைப்பு சரி செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், ஈரோடு அடுத்த நசியனூர் – ஈரோடு சாலையில், விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளது. இவை பல்வேறு புது வடிவங்களில், பல வண்ணங்களில் வைக்கப்பட்டுள்ளது. இச்சிலைகள் அரை அடி முதல் 10 அடி வரையிலான உயரத்திலும், ரூ.100 முதல் ரூ.25,000 வரை பல்வேறு விலைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கொடுமுடி அடுத்த சிவகிரி அண்ணாமலை கோட்டையில் செப்.1 ஞாயிற்றுக்கிழமை காலை 5- மணிக்கு கனவு கிராமப்புற மராத்தான் போட்டி துவங்குகிறது. 15,7,5,3,1.5 கி.மீ பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. ரூ.1 லட்சம் வரை பரிசு தொகையும் கோப்பைகளும் வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 25 கடைசி நாளாகும். பதிவு செய்ய 87780 92669 என்ற எண்ணுக்கும் web: kanavu.run தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது ஈரோட்டில் வரும் ஞாயிற்று கிழமை அன்று ஜேசிஐ ஈரோடு கேலக்சி மற்றும் குளோபல் ஆர்ட் இணைத்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி ஈரோடு செங்குந்தர் மேல்நிலை பள்ளியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் எல்கேஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் வரை தலைப்புகளில் நடத்தப்படுகிறது. இதில் பங்குபெறும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் தொடர்புக்கு 9688665042 எண்ணிற்கு அழைக்கலாம்.
கோபி அடுத்த டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று மாலை நடந்த வெடிவிபத்தில், செந்தில்குமார் மற்றும் அஜீத் என்ற இருவர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் இருவர் குடும்பத்திற்கு
தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கிவைத்தார். மேலும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார். அதன்படி, ஈரோட்டில் Milky Mist நிறுவனத்தில் ரூ.500 கோடியில் 3,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் Enes Textile திட்டம் ஈரோட்டில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி, வெள்ளோடு, சென்னிமலை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது.
Sorry, no posts matched your criteria.