India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புஞ்சைபுளியம்பட்டியில் தினசரி வியாபாரிகள் புதிய தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ளூர் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யவில்லை எனவும், விவசாயிகளை புறக்கணிப்பதாகவும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காய்கறிகளை தரையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது மறியல் போராட்டமாக மாற வாய்ப்பு உள்ளதால் புஞ்சைபுளியம்பட்டி அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோட்டில் நேற்று வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள தோல், சாய தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது சுத்திகரிக்கப்பட்டு பின்னர் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அவ்வாறு சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இன்று ஈரோடு மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் ஈரோடு – பெருந்துறை ரோடு வேப்பம்பாளையம் ஏ.இ.டி பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு நிறுவனங்களின் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த நேரடி பயிற்சி வழங்குகிறார்கள். விவசாயிகள் கலந்து கொள்ளலாம்.
ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில், நாட்டுப்புற கலைகளை பாதுகாக்கவும், இளைய தலைமுறையினரிடம் நாட்டுப்புற கலைகளை கொண்டு சேர்க்க, வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலை நேரம் தப்பாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, கும்மி போன்ற கலைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ளவர்கள், ஈரோடு பி.பி. அக்ரஹாரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு அகில்மேடு மெயின் வீதியில் பிரியாணி கடை உள்ளது. இங்கு நேற்று (ஆகஸ்ட் 22) காலை 10.20 மணியளவில் வர்த்தக காஸ் சிலிண்டரை ரெகுலேட்டரில் இருந்து கழற்றி வேறு சிலிண்டருக்கு மாற்றியபோது, ரெகுலேட்டரில் இருந்த பின் சிலிண்டரில் சிக்கியது. இதனால் காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே ராட்டைசுற்றிபாளையத்தில் பிரசித்திபெற்ற தென்னக காசி பைரவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆகஸ்ட் 26ஆம் தேதி தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கோவில் கருவறைக்குள் சென்று, ஸ்வர்ண பைரவருக்கும், ஸ்வர்ணலிங்கத்துக்கும் தங்கள் கைகளால் பால் அபிஷேகம் செய்யலாம் என பைரவ பீடத்தின் ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் ஊராட்சி, ஜீ.எஸ்., காலனி – அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி மற்றும் செல்லம்பாளையம் மாதிரிப்பள்ளியில் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் சமையலறைகள் கட்டுதல் பணி பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில், அந்தியூர் தொகுதி எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பூமி பூஜை பணிகளை தொடங்கி வைத்தார். உடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
➤கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி சார்பில், பெண்களுக்கான எம்பிராய்டரி இலவச பயிற்சி வகுப்பு செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
➤திண்டல் முருகன் கோவிலில் பூமி பூஜை அமைச்சர் பங்கேற்பு
➤அம்மாபேட்டையில் மானிய விலையில் விதை நெல் விநியோகம்
➤கோபியில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
➤7 மாதங்கலுக்கு பிறகு ஊஞ்சலூரில் இருந்து கண்டிபாளையத்துக்கு பரிசல் போக்குவரத்து தொடக்கம்
ஈரோடு மாவட்ட ஊர் காவல் படையில் காலியாக உள்ள துணை மண்டல தளபதி பதவிக்கு, 20 வயதுக்கு மேல் 45 வயதுக்கு உட்பட்ட டிகிரி தேர்ச்சி பெற்று, ஆரோக்கியமான உடற்தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் செயல்படும் ஈரோடு மாவட்ட ஊர் காவல் படை அலுவலகத்தில், காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் பெற்று கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஊர் காவல் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டல் வேலாயுத சாமி திருக்கோயிலில் ராஜகோபரத்திற்கான நிலவு கால் பூமி பூஜையும், சிவன் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையையும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி துவங்கி வைத்தார். இதில் ஈரோடு எம்.பி., கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி, மாவட்ட அறங்காவலர் சிவக்குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.