India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற நல சங்க உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஈரோடு தனியார் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் சேகர், தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார், பொருளாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.
கோபி அருகே லக்கம்பட்டி கிராமம் காலேஜ் ரோடு காலனியில் வசிக்கும் லட்சுமணன் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை வாகன விபத்து ஏற்பட்டு மூளை சாவு ஏற்பட்டதினால் நேற்றிரவு இறந்தார். இந்த நிலையில் லட்சுமணன் குடும்பத்தினர் அவரது உடலை உறுப்பு தானம் செய்தனர். இதையடுத்து அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, வருவாய் கோட்டாட்சியர் அரசு மரியாதை செலுத்தினர்.
கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற உள்ளரங்கு விளையாட்டுப் போட்டியை கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். போட்டி முடிந்தவுடன் வெற்றியாளர்களுக்கு கோப்பையை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வு அனைவரும் கலந்து கொண்டனர்.
கோபி அடுத்த கொடிவேரி பகுதியில் தடுப்பணை உள்ளது.
இந்த தடுப்பணையில் தண்ணீர் அருவி போல் ஊற்றுகிறது. இந்தத் தண்ணீரில் குளிப்பதற்கும், இயற்கையை ரசிப்பதற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.
ஈரோடு, சென்னிமலை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம், வெள்ளோடு – சதா மஹாலில், இன்று நடைபெற்றது. இதற்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., திமுக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புஞ்சைபுளியம்பட்டியில் தினசரி சந்தை வியாபாரிகள் தங்களுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் விளைவாக நகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் கடை ஒதுக்க முடிவு எடுத்து கடைகளை ஒதுக்கி தந்துள்ளது. அதனால் இன்று முதல் கடைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.
கோபி அடுத்த
கலிங்கியம் ஊராட்சி தூய்மை காவலராக இருப்பவர் ராமச்சந்திரன். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி, தங்கராஜ் ஆகியோர் செல்போன் வாங்கிக் கொண்டு திருப்பி தர மறுத்து சாதியை சொல்லி திட்டி அடித்துள்ளனர். புகாரின்பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவம் குறித்து டிஎஸ்பி சீனிவாசன் விசாரணை செய்து இருவரையும் கைது செய்தார்.
ஈரோட்டில், ஈரோடு மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், குடியரசு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக விசிக பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் எம்பி பங்கேற்கிறார். எனவே ஈரோடு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று தொல்.திருமாவளவன் எம்பிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க வேண்டும் என விசிக மேற்கு மாவட்ட செயலாளர் மிசா. தங்கவேல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு மாயவரத்தில் சாகுபடி செய்யப்பட்ட 2000 டன் நெல் மூட்டைகள் வந்தடைந்தன. அவற்றை ஈரோட்டில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு பாதுகாப்புடன் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன அவற்றைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட உள்ளது.
தமிழ்நாட்டில், நடப்பாண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 5 பிரிவுகளில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 25ம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.