India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் சாலை கும்டாபுரம் அருகே இன்று மதியம் அவ்வழியாக இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை வாகன ஓட்டியை துரத்தியது. யானையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக 2பேர் உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிலமற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பு விவசாய தொழிலாளர்களுக்கு, நிலம் வாங்க சந்தை மதிப்பில் 50% (அ) ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் மகளிருக்கு முன்னுரிமை மற்றும் முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை 0424-2259453 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 2ஏ தேர்வு நடைபெறுகிறது. இதில் ஈரோட்டில் மட்டும் 87 மையங்களில் 25,474 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வினை கண்காணிக்க மூன்று பறக்கும் படை குழுவும்,19 நடமாடும் குழுவும், மூன்று கண்காணிப்பு அலுவலர்களும் 19 ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள ஈரோடு கருவூலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி (செவ்வாய்கிழமை) மிலாது நபியை முன்னிட்டு, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி டாஸ்மாக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
பவானி அடுத்த ஊராட்சிக்கோட்டை பேரேஜ் பகுதியில் லாரி மீது கழிவுநீர் வாகனம் மோதி விபத்து ஏற்ப்பட்டது. மேட்டூரில் இருந்து பவானி நோக்கி இன்று மாலை சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரி ஊராட்சிக்கோட்டை அருகே வரும் போது எதிரே பவானியில் இருந்து வந்த கழிவுநீர் மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டது. அப்போது கழிவுநீர் வாகனம், சரக்கு லாரியின் பக்கவாட்டில் மோதி விபத்திற்குள்ளானது.
ஈரோட்டில் வார விடுமுறை தினமான சனி, ஞாயிறு – ஓணம் அரசு விடுமுறை தினமான செவ்வாய் (மிலாடிநபி) என 3 நாள் விடுமுறை வருகிறது. மேலும் பல்வேறு கல்லூரிகளில் திங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாற்று பணி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் ஈரோடு பேருந்து நிலையத்தில் இன்று மாலை கூட்டம் அதிக அளவில் இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில், வணிகர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு விற்பனைக்கு தற்காலிக பட்டாசு உரிமம் பெற பொது இ-சேவை மையங்களில் மூலம் தகுந்த ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சேவை கட்டணமாக 0070-60-109-ஏஏ-22738 வங்கி கணக்கில் ரூ.600 செலுத்தியதற்கான ரசீது உடன் அக்டோபர் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தகவலை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
பல தேர்தல்களிலும் அதிமுக தொடர்ந்து வெற்றிபெற்று வந்தது. கடந்த மக்களவைத் தேர்தல், இதை உதயநிதி உடைத்துவிட்டார்; கொங்கு மண்டலத்தையும் திமுக கோட்டையாக மாற்றிவிட்டார். அதனால், வரும் சட்டசபை தேர்தலில், மொடக்குறிச்சியில் போட்டியிடும்படி உதயநிதியிடம் பேசியுள்ளேன். அவர் போட்டியிடுவதற்கு ஏற்ப களத்தை நாம் தயார் செய்ய வேண்டும் என திமுக இளைஞர் அணி துணை செயலரும், ஈரோடு எம்பியுமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தேசிய அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பாதுகாப்பினை வழங்க மத்திய அரசு ‘e-sharm’ திட்டத்தை துவங்கியுள்ளது. இதில் 156 வகை தொழிலாளர்கள் பதிவு செய்யலாம். இதில் பதிவுசெய்வோருக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள பெற்றவா்கள் விபத்தில் மரணமடைந்தால் ரூ.2,00,000, உடல் ஊனமுற்றால் ரூ.1,00,000 இழப்பீடு பெறலாம். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 1,41,712 தொழிலாளா்கள் இத்திட்டத்தில் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு மிலாடி நபியையொட்டி வரும் 16ஆம் தேதி (திங்கள்) விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிலாடி நபி 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதையடுத்து, தமிழ்நாடு அரசு அன்று விடுமுறை அறிவித்தது. எனவே ஈரோட்டில் உள்ள மஞ்சள் மார்க்கெட்டுகள் 17ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் 16ஆம் தேதி வழக்கம்போல மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.