Erode

News October 7, 2024

ஈரோடு: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் எம்எல்ஏ

image

ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில், ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு, ஊர்வலத்தை துவங்கி வைத்தனர். பின் ஊர்வலம் நிறைவடைந்ததும் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. எனவே பெருந்துறை போலீசார் சார்பில் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

News October 7, 2024

ஈரோட்டில் அபராதம் வசூலிக்கும் முறை அமல்

image

மாநகராட்சி பணியாளர்கள் வரி வசூல் செய்ய வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்குவது, அதிக வரி நிலுவை வைத்துள்ள வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிப்பது, வணிக நிறுவனங்களுக்கு சீல் வைப்பது என நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரி வசூலை அதிகரிக்கவும், மக்கள் தாங்களாகவே முன்வந்து வரியை செலுத்தவும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

News October 6, 2024

3.57 லட்சம் பேருக்கு சோதனை; 53 பேருக்கு உறுதி

image

ஈரோட்டில் 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 நகர்புற நலவாழ்வு மையங்கள், 98 கிராமப்புற துணை சுகாதார நலவாழ்வு மையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், ஒரு அரசு மருத்துவ கல்லூரி மையம் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மையங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 3,57,642 பேருக்கு பரிசோதனை நடத்தியதில், 53 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News October 6, 2024

வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

image

ஈரோடு, திண்டல் – வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் அக்.19ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு 0424-2275860, 9499055942 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News October 6, 2024

ரூ.1-க்கு டி-ஷர்ட்: குவிந்த இளைஞர்கள்

image

ஈரோடு, காந்தி சாலையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் நேற்று ரூ.1க்கு சட்டை விற்பனை செய்யப்படும் என சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதனை நம்பி கடை திறப்பதற்கு முன் ஏராளமான இளைஞர்கள் கடைமுன் திரண்டனர். எனவே கடை முன் குவிந்த இளைஞர்களால் போக்குவரத்து பாதித்தது. எனவே போலீசார் கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

News October 5, 2024

ஈரோட்டில் ரூ.9,500 கோடி கடன் வழங்க இலக்கு

image

ஈரோட்டில் நடப்பு நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.9,521 கோடிகடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். ஈரோட்டில் 85,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர உற்பத்தி சேவை, வியாபார சாா்ந்த நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. ஈரோட்டில் உள்ள வங்கிகளுக்கு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க நடப்பு நிதியாண்டில் 9,521 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News October 5, 2024

கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்: ஈரோடு MLA

image

ஈரோட்டில் செய்தியாளா்களிடம் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், முழுமையான மதுவிலக்கு என்பது இந்தியாவில் எப்போதும் இருந்தது இல்லை. மது குடிப்பவா்கள் தங்கள் தவறை உணா்ந்து திருந்தினால் ஒழிய மதுவிலக்கை கொண்டுவருவது சிரமம். டாஸ்மாக் கடைகளை அதிகமாக மூடினால் கள்ளச்சாராயம் அதிகமாக காய்ச்சப்படும். அதற்கு பதில் விவசாயிகள் நலம்பெற கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம் என்றார்.

News October 5, 2024

தொழிற்சாலை சாயக்கழிவால் புற்றுநோய் அதிகரிப்பு

image

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் மேம்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தொழிற்சாலை சாயக் கழிவால் புற்றுநோய் அதிகரித்துள்ளது. இந்த புற்றுநோய் என்பது உணவு பழக்க வழக்கங்களால் தற்போது அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 18 வயது தாண்டிய அனைவருக்கும் புற்று நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

News October 4, 2024

பண்ணாரி அம்மன் கோவிலில் இலவச திருமணம்

image

பவானிசாகர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருக்கோவிலில் இலவச திருமணம் தமிழக அறநிலை துறை மூலமாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 60,000 மற்றும் 4 கிராம் தங்கம் மதிப்பில் திருக்கோவிலில் இலவச திருமணம் 21.10.2023 முதல் நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது .இதில் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளதாக பாராட்டுகின்றனர்.

News October 4, 2024

ஈரோட்டில் மேலும் 2 பேருக்கு எலிக்காய்ச்சல்

image

அந்தியூர் அடுத்த பூனாட்சி பகுதியில் வடமாநில தொழிலாளர்களான குமார் (19) மற்றும் பரனித்தர்(19) ஆகியோருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதில், தினேஷ்குமார் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார். மேலும் ரதி (36) என்ற பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!