India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைக்குச் செல்ல தார் சாலை வழியாக செல்ல 18.09.2024 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. படி வழியாக மட்டுமே செல்ல பக்தர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள், மறு அறிவிப்பு வரும் வரை வாகனங்கள் மலைக்கு செல்ல அனுமதி இல்லை என இந்து அறநிலையத்துறை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெரியார் பிறந்தநாள் விழா இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோட்டில் பெரியார் – அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு, பெரியார் வீதியில் பெரியார் – அண்ணா நினைவு இல்லம் உள்ளது. இந்த இல்லம் இன்றும் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் பெரியார் தொடர்பான புகைப்படங்கள், ஆவணங்கள், தனிப்பட்ட உடைமைகளான கட்டில், சேர் போன்ற பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவகத்தில் பெரியாரின் சமூக சீர்திருத்தம் மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகள் தொடர்பான புத்தகங்கள் கொண்ட நூலகமும் உள்ளது.
ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு-செங்கோட்டை ரயில், கரூா் வழியே திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. மதுரை கோட்டம், சமயநல்லூா்-கூடல்நகா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு-செங்கோட்டை ரயில் செப்.18 முதல் அக்.7 வரையும், செங்கோட்டை-ஈரோடு ரயில் செப்.19 முதல் அக்.8 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டில் கடந்த வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது இது நேற்று 100 டிகிரி தொட்டது, இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள், நேற்று ஈரோட்டில் வெயில் அதிகபட்சமாக102.2 டிகிரி ஆகும். இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மதியம் வெளியே வரத் தயங்கினார்கள் சாலைகளில் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது.
சமூகத்தில் புரையோடிக்கொண்டிருந்த சா’தீய’ சிந்தனைகளை அப்புறப்படுத்த ஈரோட்டில் உதித்த பெரியார் என்று அறியப்படும் ஈ.வெ.ராமசாமியின் பிறந்த தினம் இன்று. இவரை SOCIAL ENGINEER என்று கூட அழைக்கலாம். இந்த சோசியல் இன்ஜினியரிங் அவ்வளவு எளிதில் நடக்கக் கூடியது அல்ல; அதை செய்து காட்டியவர் ஈவெரா என்ற பெரியார். அவரை தொண்டு செய்து பழுத்த பழம் என்று அவரை நேசிப்போர் சொல்வதுண்டு. பெரியார் குறித்து உங்கள் கருத்து?
சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி ,கிழக்கு புதுப்பாளையம் கன்னிமார் சுவாமி கோவிலில் இன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, கோவில் அருகில் ஆலமரத்தில் இருந்த மலைத்தேன் கூடு கலைந்து திருமணத்துக்கு வந்திருந்த நபர்களை தேனீ கடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மற்றும் கோபி ஆகிய இரண்டு இடங்களில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளது. இதில் 2024ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை 0424-2275244, 70108 75256 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமியை ஈரோட்டில் அவரது இல்லத்தில் தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். உடன் ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம், மாநில நிதி செயலாளர் சிறுத்தை செல்வன், ஈரோடு மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன், இளம்பாசறை தென் மண்டல செயலாளர் குணவளவன் உடன் இருந்தனர்.
ஈரோடு வஉசி பூங்காவில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். யார் அவர், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.