India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் உள்ள மஞ்சள் வளாகத்திற்கு, ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 12, 13 தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் விடுமுறை தினமாகும். பின்னர் அக்டோபர் 14ஆம் தேதி (திங்கள்கிழமை) வழக்கம்போல மஞ்சள் ஏல விற்பனை நடைபெறும் என ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களின்கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் 99 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளோர் இங்கே <
பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் பெங்களூர் To கொச்சின் NH-544 தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் 2 மணியளவில் சுங்கச்சாவடியை அடுத்து வாய்ப்பாடி பிரிவில் பைக்கில் இருவர் அதிவேகத்தில் செல்லும் பொழுது நிலைதடுமாறி பேரி கார்டில் அடித்து கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழ்நாடு மாநில ஊடகம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் குழுவினரால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி பொருள்கள் விருப்பக் கண்காட்சி ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு 9.10.2024 முதல்15.10.2024 வரை பொருள்கள் விருப்பக் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் மகளிர் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பொருள்களைச் வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர், கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அவ்வகையில், ஈரோட்டில் 51 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு https://drbtsi.in/how_apply_online.php என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படி தனியார் வேலை வாய்ப்பு நிர்வாகம் சார்பில் வரும் (19.10.2024) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெறுகின்றது. இதில் 8, 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இத்தகவலை Share பன்னுங்க.
ஈரோட்டில் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி நேற்று நடைபெற்றது. ஈரோடு சிஎஸ்ஐ பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சுபாராவ் தொடங்கி வைத்தார். குறுமைய அளவில் வெற்றி பெற்ற அணிகள் இதில் கலந்துகொண்டு விளையாடினார்கள். இதில் வெற்றி பெரும் அணி மாநில அளவுக்கு தகுதி பெறுவார்கள்.
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் உள்ள மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ளது. இக்கோவிலில் இலவச திருமண திட்டத்தில், மணமக்களுக்கு 4 கிராம் தங்கம் உள்பட ரூ.60,000 செலவில் சீர்வரிசை வழங்கப்பட உள்ளது. இதில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி, இலவச திருமணம் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், கோவில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்படது.
ஈரோடு, புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில்புதூரில் பிரசித்தி பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகைக்கு அடுத்த நாள், அம்புசேர்வை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். இந்நிலையில் நடப்பாண்டு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் அம்புசேர்வை விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஈரோடு, பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில், ஈரோடு மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான குரலிசை, பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியம் என 4 பிரிவுகளில் கலைப் போட்டி வரும் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 0424-2610290, 99946-61754 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். போட்டி அன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல் உடன் முன்பதிவு செய்ய வேண்டும்.
Sorry, no posts matched your criteria.