India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெருந்துறை பகுதியில் பணிக்கம்பாளையம் ஏரியாவில் வட மாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் வங்காளதேசத்தினர் உரிய ஆவணங்கள் இன்றி பாஸ்போர்ட், விசா மற்றும் ஆதார் இல்லாமல் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோர்ட் உத்தரவுப்படி சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு போனஸ் வழங்கக் கோரி ஈரோடு மாவட்ட மருத்துவத் துறை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.சின்னசாமி, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், அரசு மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமார் 30,000 ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ், கருணைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (அக்.14) திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், மேட்டுக்கடை, தங்கம் மஹாலில் நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ் தலைமை வகிக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திமுக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான சு.முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
பவானி காளிங்கராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (24). இவர் சித்தோடு ரிங் ரோடு பகுதியில் நேற்று ரோட்டை கடக்க முயன்றார். அப்பொழுது சிறுவன் ஒருவர் ஓட்டிவந்த பைக் மோதியதில் வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கோபி வரப்பள்ளம் பெருமகைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன், மனைவி ஈஸ்வரி. இவர்கள் கூலிவேலை பார்த்து வந்தனர். சில நாட்களுக்கு ஈஸ்வரியின் தந்தை கபாலசாமி இறந்துவிட்டார். இதனால் நீண்ட நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஈஸ்வரி தூக்கு மாட்டிக் கொண்டார். அவரை பரிசோதித்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஈரோடு மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் 2 உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சங்க உறுப்பினர் பதவிகளுக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சமூக பணிகளில் ஈடுபட்ட முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லக்கூடிய பர்கூர் மலை ரோடு மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய கன மழை பெய்ததால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் முடிந்து விழுந்தன. அதனால் அந்தியூரிலிருந்து மைசூர் செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை இன்று காலை 6 மணி முதல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் வணிகர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு விற்பனை செய்ய பட்டாசு விற்பனை உரிமம் பெற வேண்டும். இதற்கு பொது இ-சேவை மையங்களின் மூலம் தகுந்த ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சேவை கட்டணமாக ரூ.600ஐ 0070-60-109-AA-22738 என்ற கணக்கில் செலுத்தியதற்கான ரசீது உடன் இன்று (அக்டோபர் 12) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திரைப்பட இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் இன்று அவர் சிறுவயதில் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் வேலை பார்த்த இடத்தில் பழைய நினைவுகளை நினைவு கூறும் வகையில் முதலாளியின் வீட்டில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார். இயக்குனருக்கு அவருடன் அப்பொழுது பணியாற்றிய பணியாளர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தாளவாடியில் வாரிசு சான்றிதழ் வழங்க, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆசனூர் விஏஓவை, லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தனர். தனது மாமனாரின் தந்தை இறப்புக்கு வாரிசு சான்றிதழ் பெற ஒருவர் ஆசனூர் விஏஓவை அணுகினார். விஏஓ ருத்ரசெல்வன் 50 ஆயிரம் ரூபாய் தர பேரம் பேசி வாங்கினார். அப்போது வளாகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விஏஓவை கையும் களவுமாக கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.