India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நவம்பர் 15ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது86754-12356, 94990-55942 என்ற எண்கள் அல்லது erodemegajobfair@gmail.com மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை மற்றும் பல்வேறு அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் பெற்று கொண்டார். தொடர்ந்து நலவாரியத்தில் பதிவு பெற்ற தூய்மை பணியாளர் வாரிசு தாரர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார்.
ஆப்பக்கூடல் அருகே அத்தாணி பகுதியில் அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிள் பயணம் செய்த தாய், மகள் அதே இடத்தில் இன்று உயிரிழந்தனர். அவர்களை ஆப்பக்கூடல் போலீசார் மீட்டு உடலை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோட்டில் 102 மருத்துவ சேவை சுகாதார ஆலோசகர் பணிக்கு இன்று நேர்முகத் தேர்வு நடக்கிறது. மதியம் 2 மணி முதல் 4 மணி வரை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் பழைய கட்டடம் 2வது தளத்தில் நடைபெற உள்ளது. அடிப்படை கல்வித் தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங், ஜி.என்.எம், ஏ.என்.எம் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 19 முதல் 30க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் நவம்பர் 16, 17 மற்றும் 23, 24ஆம் தேதிகளில் அடைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 1/1/25 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்திற்கும் படிவங்கள் வழங்கப்படும் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
கொடிவேரி அணை பாசனத்துக்குட்பட்ட தடப்பள்ளி-அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பகுதியில், நவம்பர் 7ம் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. இங்கு ஒரு கிலோ நெல் ரூ.24.50 கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இப்பகுதியில் 24,613 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. சராசரியாக ஏக்கருக்கு 3 டன் விளைவித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக கொடிவேரி பாசன பகுதி மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது.
பெருந்துறை யூனியன், மேட்டுப்புதூர் ஊராட்சி கிணிப்பாளையம் பகுதியில் குளக்கரையை பலப்படுத்தும் பணியில் 25க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த மரத்தில் கட்டி இருந்த தேன் கூட்டின் மீது யாரோ கல் வீசியதாக தெரிகிறது. இதனால் தேனீக்கள் பறந்து வந்து பணியில் இருந்த பணியாளர்களை விரட்டி விரட்டி கொட்டி உள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தேசிய அளவிலான அட்யா பட்யா ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முன்தினம் ஈரோடு கொங்கு நேஷனல் பள்ளியில் துவங்கியது. அதன் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் மாணவிகள் இரண்டு பிரிவிலும் பாண்டிச்சேரி அணியினர் வெற்றி பெற்றனர். பரிசளிப்பு விழாவில் சிந்து ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பரிசு கோப்பையை வழங்கினார்.துணை தலைவர் கவின் சங்கர் நன்றி தெரிவித்தார்.
ஈரோடு, மேட்டூர் சாலையில் உள்ள ஜெம் நகை தொழில்நுட்ப பயிற்சி மையத்தில், மத்திய அரசின் ஸ்கில் இந்தியா அமைப்பு சார்பில், நாளை (நவ.11) முதல் 20ஆம் தேதி வரை தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை போன்ற பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே பருவ நிலை மாற்றம் மற்றும் மழை காரணமாக காய்ச்சல் மற்றும் சளி அதிகரித்து வருவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மக்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் படை எடுத்த வண்ணம் அதிகாலையில் இருந்தே வருகின்றனர். மக்கள் போதிய அளவில் விழிப்புணர்வு இருக்க வேண்டும் எனவும். நீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
Sorry, no posts matched your criteria.