Erode

News November 11, 2024

ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் நவம்பர் 16, 17 மற்றும் 23, 24ஆம் தேதிகளில் அடைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 1/1/25 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்திற்கும் படிவங்கள் வழங்கப்படும் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News November 11, 2024

மாநிலத்தில் கொடிவேரி பாசன பகுதி முதலிடம்

image

கொடிவேரி அணை பாசனத்துக்குட்பட்ட தடப்பள்ளி-அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பகுதியில், நவம்பர் 7ம் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. இங்கு ஒரு கிலோ நெல் ரூ.24.50 கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இப்பகுதியில் 24,613 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. சராசரியாக ஏக்கருக்கு 3 டன் விளைவித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக கொடிவேரி பாசன பகுதி மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது.

News November 10, 2024

100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொட்டிய தேனீக்கள்

image

பெருந்துறை யூனியன், மேட்டுப்புதூர் ஊராட்சி கிணிப்பாளையம் பகுதியில் குளக்கரையை பலப்படுத்தும் பணியில் 25க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த மரத்தில் கட்டி இருந்த தேன் கூட்டின் மீது யாரோ கல் வீசியதாக தெரிகிறது. இதனால் தேனீக்கள் பறந்து வந்து பணியில் இருந்த பணியாளர்களை விரட்டி விரட்டி கொட்டி உள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

News November 10, 2024

தேசிய அளவிலான அட்யா பட்யா போட்டி பரிசளிப்பு விழா

image

தேசிய அளவிலான அட்யா பட்யா ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முன்தினம் ஈரோடு கொங்கு நேஷனல் பள்ளியில் துவங்கியது. அதன் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் மாணவிகள் இரண்டு பிரிவிலும் பாண்டிச்சேரி அணியினர் வெற்றி பெற்றனர். பரிசளிப்பு விழாவில் சிந்து ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பரிசு கோப்பையை வழங்கினார்.துணை தலைவர் கவின் சங்கர் நன்றி தெரிவித்தார்.

News November 10, 2024

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

image

ஈரோடு, மேட்டூர் சாலையில் உள்ள ஜெம் நகை தொழில்நுட்ப பயிற்சி மையத்தில், மத்திய அரசின் ஸ்கில் இந்தியா அமைப்பு சார்பில், நாளை (நவ.11) முதல் 20ஆம் தேதி வரை தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை போன்ற பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

News November 10, 2024

மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்

image

ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே பருவ நிலை மாற்றம் மற்றும் மழை காரணமாக காய்ச்சல் மற்றும் சளி அதிகரித்து வருவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மக்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் படை எடுத்த வண்ணம் அதிகாலையில் இருந்தே வருகின்றனர். மக்கள் போதிய அளவில் விழிப்புணர்வு இருக்க வேண்டும் எனவும். நீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

News November 10, 2024

ஆய்வக நுட்புநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

ஈரோடு மாநகராட்சியில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4 ஆய்வக தொழில்நுட்ப அதிகாரி காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை நவம்பர் 25ஆம் தேதிக்குள் ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என ஈரோடு ஆணையாளர் என்.மனிஷ் தெரிவித்துள்ளார்.

News November 10, 2024

மனுநீதி நாள் முகாம்

image

பெருந்துறை, காஞ்சிக்கோயில் உள் வட்டம் கந்தம்பாளையம் கிராமம் அம்மன் திருமண மண்டபத்தில் வரும் 13-ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிகளும் கலந்து கொண்டு பொதுமக்கள் மனுக்கள் மீது தீர்வு காண உள்ளனர். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

News November 9, 2024

ஈரோடு: உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

image

பெருந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருளின் தயாரிப்பு முறை மற்றும் தரம் குறித்து ஆய்வு இன்று (9/11/24) மேற்கொள்ளப்பட்டது. இதனை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாநில ஆணையாளர் லால்வேனா ஆய்வு செய்தார். உடன் ஈரோடு மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

News November 9, 2024

ஈரோடு பஸ் நிலையத்தில் அட்ராசிட்டி செய்த வாலிபர்

image

ஈரோடு பேருந்து நிலையத்தில் இன்று போக்குவரத்து போலீசார் பஸ் நிலையத்திற்கு வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் இருசக்கரத்தில் அத்துமீறி நுழைந்த வாலிபருக்கு போக்குவரத்து போலீசார் ரூ.3500 அபராதம் விதித்து மூன்று வழக்குகள் பதிவு செய்தனர். ஆத்திரத்தில் மற்ற வாகனங்களையும் வழி மறித்து அபராதம் விதிக்கச் சொல்லி இளைஞர் தொந்தரவு செய்த கூறப்படுகிறது. 

error: Content is protected !!