India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி அருகே பாலசமுத்திரம் பகுதியில் இருந்து பாலாறு அணை செல்லும் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மற்றொருவர், மருத்துவமனையில் உயிரிழந்தார். தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவரை பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு பேட்டரி வண்டிகள் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, இதுவரை ₹30 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, ₹30 கோடி செலவில் புதிய சாலை போடப்பட்டுள்ளது. ₹15 கோடியில் லிப்ட் வசதியுடன் நகரும் நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. லக்கன்கோட்டை முதல் பழநி வரை 4 வழிச்சாலை அகலப்படுத்தப்பட்டு மரங்கள் நடப்பட்டுள்ளது. விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்றார்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலச்சத்திரத்தில் இருசக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி பிரபாகர் மற்றும் நண்பர் ராஜ்குமார் ஆகிய இருவர் ஓட்டிச் சென்றனர். அப்போது அவர்களது பைக் நிலை தடுமாறி முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் பிரபாகர் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுதியுள்ளது.
திண்டுக்கல்லில் இன்று (பிப்.15) இரவு 11.00 மணி முதல் நாளை வியாழக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்தது. இதில் அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதிய விபத்தில், திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி(60) என்ற பூ வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளபட்டியைச் சேர்ந்த அஜய், அருண், மகேந்திரன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்தது. இதில் அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதிய விபத்தில், திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி(60) என்ற பூ வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளபட்டியைச் சேர்ந்த அஜய், அருண், மகேந்திரன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டியில் ஒடுக்கம் தவசி மேடை கோயில் உள்ளது. இங்கு சிவராத்திரியை முன்னிட்டு 30 நாட்களுக்கு சூரிய ஒளி மூலவர் மீது படும். பரத்வாஜர் ஒரு தவமேடையில் யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிப்பட்டார். இதனால் இத்தலத்திற்கு ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் பெற்றது. இங்கு கோரிக்கை நிறைவேற பூட்டு போட்டு பக்தர்கள் சாமி கும்பிடுவார்கள். இந்த கோயில் சென்றிருந்தால் ஷேர் செய்யுங்கள் மக்களே.
திண்டுக்கல்லில் முக்கியமான கோவில்களில் கோட்டை மாரியம்மன். இக்கோவில் விஜயநகரப் பேரரசு காலத்தில் போர் வீரர்களின் காவல் தெய்வமாக வணங்கினர். திண்டுக்கல் கோட்டையின் அடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. கருவறையில் உள்ள மாரியம்மனுக்கு எட்டு திருக்கரங்கள் உள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.3 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 776 கிடைத்தது. தங்கம் 557 கிராமும், வெள்ளி 21,235 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத்தாள்கள் 1,153 கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் ஆகியவற்றையும் பக்தா்கள் காணிக்கையாக கிடைத்தது.
நத்தம் அருகே துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமரபட்டி புதூர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் இறந்த நிலையில் கிடக்கிறார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் நத்தம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார் இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி இறந்தவர் யார் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.