Dindigul

News April 5, 2025

JOB: திண்டுக்கல்லில் வேலை! நல்ல சம்பளம்

image

திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 38 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, Any Degree, B.Sc, BDS, D.Pharm, Diploma, DMLT, ITI, MDS, MSW, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.34,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் செய்யவும். <<>>விண்ணப்பிக்க ஏப்.10 கடைசி நாள் ஆகும். வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 5, 2025

திண்டுக்கல் அருகே விபத்து 

image

திண்டுக்கல், கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது, இதனால் வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வர தொடங்கியுள்ளனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

News April 4, 2025

தொலைந்த பொருட்களை மீட்கும் வண்டி கருப்பசாமி

image

திண்டுக்கல் – திருச்சி ரோட்டில் இருக்கும் வண்டி கருப்பசாமி, கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றி கொடுக்கும் சாமி என பக்தர்களால் போற்றப்படுகிறார். இக் கோயிலில் ஓர் சிறப்பு உண்டு. நீங்கள் ஏதேனும் பொருட்களை தொலைத்து விட்டால், வண்டி கருப்பசாமியிடம் முறையிட்டால் போதும். உங்கள் பொருள் அதுவாக கை வந்து சேருமாம். விலை உயர்ந்த பொருட்களை தொலைத்து தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 4, 2025

சுயவேலை வாய்ப்பு பயிற்சி  

image

திண்டுக்கல்- நத்தம் சாலையில் சிறுமலைபிரிவு பஸ் நிறுத்தம் அருகே கனரா வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2025-26-ம் ஆண்டுக்கான 23 வகையான இலவச பயிற்சி வகுப்புகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதில் ஆண்களுக்கான வீட்டு வயரிங் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. வரும் 28ந்தேதி இந்த பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண்கள் பயிற்சியில் சேரலாம்.

News April 4, 2025

தமிழில் பெயர்ப்பலகை: ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். மே 15-க்குள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ்ப் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிவிப்பு வழங்கி அபராதம் விதிக்கப்படும். அபராதத்தைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News April 4, 2025

திண்டுக்கல்லுக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(ஏப்.4) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 3, 2025

குழந்தை வரம் தரும் கோட்டை மாரியம்மன்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சக்தி வாய்ந்த கோயில்களில் ஒன்று கோட்டை மாரியம்மன் கோயில். 8 கைகள் கொண்டு காட்சி தரும் இந்த மாரியம்மனை மனதார வேண்டினால் திருமணம் ஆகாதவர்களுக்கு தாளி பாக்கியம், ஆனவர்களுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பேகம்பூரில் உள்ளது இந்த கோட்டை மாரியம்மன் கோயில். குழந்தை வரம் வேண்டும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 3, 2025

வேலை வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க

image

டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தென் மாவட்டத்தில் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள், கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் தொடர்பு கொள்ளலாம்.

News April 3, 2025

திண்டுக்கல் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 2, 2025

ஜாதக தோஷம் தீர்க்கும் கதிர் நரசிங்க பெருமாள்

image

திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொத்தப்புள்ளி கிராமத்தில் உள்ளது பழமையான கதிர் நரசிங்க பெருமாள் கோயில். இந்தப் பெருமாளை வழிபட்டால் ஜாதக ரீதியாக ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. திண்டுக்கல்லில் இருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் பழனி நெடுஞ்சாலையில் உள்ளது இந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில். ஜாதகப் பிரச்சனையில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!