India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் திரு உருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்: அரசு நிலத்திற்கு பட்டா வழங்கியதை ரத்து செய்யவும், கல்லறையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக குறைதீர் கூட்டத்தில் 160 பேர் முறையிட்டனர். கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இதில் பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
திண்டுக்கல்: ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் மாதாந்திர உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளின் விவரம் சேகரிக்கப்பட்டு, அதில் ஒரு உதவித் தொகையை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 2 துறைகளிடமிருந்து உதவித்தொகை பெறும் 200 போ் கண்டறியப்பட்டனா். உயிரிழந்த மாற்றுத்திறனாளிகள் 300-க்கும் மேற்பட்டோரின் பெயா்களில் வழங்கப்பட்டுவந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டிருக்கிறது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழா இன்று மாலை 4 மணி அளவில் சென்னையில் நடைபெற உள்ளது. இது சமயம் நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர், கரிகாலபாண்டியன் தலைமையில் நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி, சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், நிலக்கோட்டை மேற்கு அலுவலகத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 19.09.24 காலை 10.00 மணியளவில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான உதவித்தொகை உதவி உபகரணங்கள் மற்றும் இதர கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து சுமார் 160 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உடனடி தீர்வு காணும் படி ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
பழனியை அடுத்த புளியம்பட்டியில் சுயம்பு உச்சிகாளியம்மன் கோயிலில் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் அமைச்சா் சக்கரபாணி, தொப்பம்பட்டி ஒன்றிய குழுத் தலைவா் சத்தியபுவனா, திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் பொன்ராஜ், ஒன்றிய செயலா் சுப்பிரமணி, மாவட்ட உறுப்பினா் கிருஷ்ணன் உள்பட பலா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு குதுப்பணம்பட்டியை சேர்ந்த நகைகள் வடிவமைப்பு தொழில் செய்பவர் சிந்தாமணி (83). நேற்று காலை டூவீலரில் கிராமத்திலிருந்து எரியோட்டிற்கு சென்றபோது கரூர் திண்டுக்கல் ரோட்டில் வந்த சுற்றுலா வேன் மோதி இறந்தார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து எரியோடு போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் முருகன் கோயில் பஞ்சாமிர்தத்தின் காலாவதி தேதியை 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரித்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
➤திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
➤கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
➤திண்டுக்கல்லில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் செப்.20 அன்று நடைபெறவுள்ளது.
➤திண்டுக்கல்லில் 8040 வழக்குகளுக்கு தீர்வு
➤திண்டுக்கல்லுக்கு இன்று HAPPY BIRTHDAY
➤குரூப் 2 தேர்வு: திண்டுக்கல்லில் 5778 பேர் ஆப்சென்ட்
Sorry, no posts matched your criteria.