India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல், நத்தம், வேலம்பட்டியில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் மொத்த விற்பனை கடை உள்ளது. இந்நிலையில் இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் துணிகள் மற்றும் தயாரிப்பு பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், தீயை பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அக்டோபர்-24 (இன்று) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அக்டோபர்-23 (இன்று) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!
பழனியில் உள்ள கான்வென்ட் ரோட்டில் எலக்ட்ரிக் கடை நடத்தி வந்தவர் இளங்குமரன். இவரது மனைவி ரேணுகா தேவி ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு பிளஸ் 2 படிக்கும் ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் இன்று தாய் மற்றும் மகள் கழுத்து அறுபட்ட நிலையிலும், தந்தை தூக்கிட்ட நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளியில் இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் சூரியகாந்த் அமர்வில் நடந்தது. இடைக்காலமாக தனது சொந்த ஊருக்கு அங்கீத் சென்று திரும்ப உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மீண்டும் 9ம் தேதி சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையில் நிலச்சரிவு இன்று ஏற்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சாலையில் பாறைகள், மண் கிடப்பதால் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 31-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் R.N.ரவி தலைமையேற்று மாணவிகளுக்கு பட்டங்களை இன்று வழங்கினார். இவ்விழாவில் மொத்தம் 6,635 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. உடன் பல்கலைக்கழக துணைவேந்தர் கலா மற்றும் பலர் பங்கேற்றனர்.
கொடைக்கானல் வந்த தமிழக ஆளுநர் R.N.ரவியின் கவனத்தை ஈர்க்கும் வ கையில் அவர் தங்கி இருந்த ஓட்டல் முன்புறம் மற்றும் அவர் பங்கேற்க சென்ற வழிகளில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. நேற்று இரவு வரை இந்த போஸ்டர்கள் தெரியாத நிலையில் இன்று காலை பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டதால் அதனை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தினர்.
திண்டுக்கல்- சிறுமலை புதூர் அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்ததிண்டுக்கல் தாலுகா காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.