Dharmapuri

News August 20, 2025

தருமபுரி இளைஞர்களுக்கு விமான படையில் வேலை

image

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்களுக்கு இந்திய விமான படையில் அக்னிவீர் (வாயு) (OS) பணிக்கு ஆட்சேர்ப்பு , தாம்பரம் விமானப்படை வளாகத்தில் செப்டம்பர் 2 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு ஜூலை 1, 2025 அன்று நிலவரப்படி, 17 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

ஒகேனக்கல் ஆற்றில் 1,45,000 கன அடி தண்ணீர் வத்து

image

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு நேற்று இரண்டாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக S.கரிகால் பாரிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி‌ புஷ்பராணி, அரூர் செந்தில்ராஜ், பென்னாகரம் முரளி மற்றும் பாலக்கோடு பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் 22.08.2025 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ் தெரிவித்துள்ளார். இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஷேர் பண்ணுங்க!

News August 19, 2025

ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பால் கலெக்டர் ஆய்வு

image

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது, பென்னாகரம் ஒன்றிய பொறுப்பாளர் மடம் முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News August 19, 2025

தர்மபுரி: டிகிரி போதும்.. வங்கி வேலை ரெடி!

image

தமிழகம் முழுவதும் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வயது வரம்பு, விண்னப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க!

News August 19, 2025

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,15,000 கன அடி தண்ணீர் வரத்து

image

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (19.08.2025) காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1,15,000 கன அடியாக தண்ணீர் வரத்து கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாவது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

தர்மபுரி : B.E படித்தவர்களுக்கு ஏர்போர்ட் வேலை!

image

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 976 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டக்கலை, சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பி.இ, பி.டெக், எம்.சி.ஏ மற்றும் கேட் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். ரூ.40,000 – ரூ.1,40,000 வரை சம்பளம். செப்.27ம் தேதி கடைசிநாள் <>மேலும் விவரங்களுக்கு<<>>. ஷேர் பண்ணுங்க.

News August 19, 2025

நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க தடை

image

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நேற்று(ஆக.18) வரை 50,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று(ஆக.19) காலை நிலவரப்படி 78,000 கனஅடியாக அதிகரித்துள்ளது, அதனால் ஏற்கனவே பரிசல்கள் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குளிக்கவும் தடை , கரையோர பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

தர்மபுரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆக.19) தர்மபுரி நகராட்சியில் செங்குந்தர் மண்டபம், அரூர் பேரூராட்சியில் பொன் கற்பகம் மண்டபம், தர்மபுரி வட்டாரத்தில் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் வட்டாரத்தில் கூத்தபாடி பெரியார் மண்டபம், ஏரியூர் வட்டாரத்தில் ஜக்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், பாலக்கோடு வட்டாரத்தில் பாடி சமுதாய கூடம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. SHARE

error: Content is protected !!