Dharmapuri

News September 7, 2024

தருமபுரியில் அனுமதியின்றி சிலை வைத்தால் நடவடிக்கை

image

தருமபுரி மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க முன்கூட்டியே வருவாய் கோட்டாட்சியரிடம் இருந்து உரிய முறையில் தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பம் அளித்து அனுமதி பெற வேண்டும். பொது இடங்களில் அமைக்கப்பட்டால் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். சிலை அமைக்க அனுமதி பெற்றவர்கள் புதிய நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

கலப்பு உரங்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து

image

தர்மபுரி மாவட்டத்தில் நெல் சாகுபடி பணிக்கு விவசாயிகள் தயாரிக்க வரும் சூழலில் கலப்பு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. உர உரிமை பெற்ற மொத்த விற்பனையாளர்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்பவோ பிற மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்தாலோ உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தர்மபுரி மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் குணசேகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

காவிரி கரையில் 1 கோடி பனைவிதைக்க ஆட்சியர் அழைப்பு.

image

தருமபுரியில் காவிரிக்கரையில் மற்றும் தமிழ்நாட்டின் நீர்நிலைகளில் ஒரு கோடி பனைவிதைகள் நடும் நடும்பணி நாளை(செப் 8) காலை 10.30 மணியளவில் இருந்து ஊட்டமலை, ஒகேனக்கல்  காவிரி பகுதியில்              பனைவிதைக்க உள்ளனர். இதில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பனை விதைகளை விதைக்க வருமாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.     ஆர்வமுள்ளோர்க்கு பகிரவும்.

News September 6, 2024

தருமபுரியில் விநாயகர் சிலை கரைக்க தேதிகள் வெளியீடு

image

தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு 07.09.2024, 09.09.2024, 13.09.2024 ஆகிய தேதிகளில் மட்டும் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டும் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

தருமபுரியில் அரசியல் கட்சியினரின் கருத்துகேட்பு கூட்டம்

image

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025-ஐ வாக்குசாவடி மறுசீரமைப்பு முன்மொழிவுகளை இறுதிசெய்யவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரான்ஸில் ராஜ்குமார், அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 6, 2024

தருமபுரி மக்கள் விண்ணப்பிக்க அழைப்பு

image

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் (NCVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனி தேர்வர்களாக கலந்துகொள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றி www.skill training.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் செப் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.சோ. மகேஷ்வரன் இன்று(செப் 6) காவல்துறை வாகனங்களை தணிக்கை செய்து மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த காவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

News September 6, 2024

பாலக்கோடு அருகே 16 வயது சிறுமியை கடத்தியவர் கைது

image

பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார். சிறுமி, கடந்த 30ஆம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து விசாரித்த போது தேன்கனிக்கோட்டை அருகே 21 வயது வாலிபர் சிறுமியை கடத்தியது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமியை கடத்திய வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 6, 2024

தருமபுரி வேளாண் இணை இயக்குனர் அறிவுறுத்தல்

image

தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமது அறிக்கையில்: நடப்பு பருவத்தில் நெல், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி விதை பண்ணையாக பதிவு செய்து களப்பணியாளர்களின் வழிகாட்டுதல் மற்றும் உயர் தொழில்நுட்பங்களை பின்பற்றி சாகுபடி செய்து பயன்பெற கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 6, 2024

தொப்பூர் கணவாயில் விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

image

தொப்பூர் கணவாய் பகுதியில் அதிக அளவில் நடந்து வந்த வாகன விபத்துகளை தடுக்க வேக கட்டுப்பாட்டு திட்டம் கடந்த 3 ஆண்டு முன் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொப்பூர் கணவாய் பகுதியில் வேக கட்டுப்பாட்டு விதிமுறையை மீறிய வாகனங்கள் மீது 13,630 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்துக்கள், உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

error: Content is protected !!