India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி (மற்றும்) மேம்பாட்டு கழகம் (தாட்கோ) முன்னெடுப்பாக டாக்டர் அம்பேத்கர் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி மையத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு 1 வருட கால UPSC தேர்வுக்கான முதல்நிலை பயிற்சி வழங்கவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தருமபுரி ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படும் நகர்ப்புற பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர் பணியிடத்திற்கு தருமபுரி நகர்ப்புற வாழ்வாதார மையம் மூலம் வெளிச்சந்தை அடிப்படையில் தற்காலிகமாக பணியில் ஈடுபடுத்துவதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் வருகின்ற 12.9.2024 அன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரிய ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால நுட்புணர்வுகள் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் தங்களது தகுதி சான்றிதழ்கள் ஓட்டுனர் உரிமைச் சான்று, அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். தொடர்புக்கு. 8925940856, 8925940858.
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட மாணவ மாணவியருக்கு அப்பாவு நகரில் உள்ள நகராட்சி துவக்க பள்ளியில் செப் 15 அன்று மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைப்பெற உள்ளது. கலை பண்பாட்டுத்துறை தமிழ்நாடு ஜவகர் மன்றத்தின் வாயிலாக 2024-2025 நிதியாண்டின் கலை போட்டிகள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் பங்குபெறலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் கி. சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பீன்ஸ் ஒரு கிலோ ₹106 ரூபாய் முதல் ₹120ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பீன்ஸ் வரத்து அதிகரிப்பு காரணமாக உழவர் சந்தையில் இன்று ஒரு கிலோ ₹96 ரூபாய் எனவும், வெளிமார்க்கெட்டில் ₹100 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பாப்பிரெட்டிபட்டி நெடுஞ்சாலையில் பொறியாளர் சண்முகம் தலைமையில் சில்லாரஅள்ளி, சந்த பட்டி, பறைய பட்டி புதூர் ஏரி, நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதி மற்றும் நெடுஞ்சாலை ஓர பகுதிகளில் பனை விதை நடும் பணி நேற்று துவக்கி வைக்கப்பட்டது . இதில் நெடுஞ்சாலை ஆய்வாளர்கள் சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் .
கர்நாடகா மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர்.இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லாமலிருக்க தமிழக எல்லையான தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் ரூ. 462 கோடி மதிப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இது 1,724 ஏக்கர் பரப்பளவில் அமைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிப்காட் தொழிற்பூங்கா அமைவதன் மூலம் 18,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகத்திடம் சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்திற்கு பசுமை தாயகத்தின் தலைவர் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக நேற்று வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுச்சாமி பொன்னாடை அணிவித்து வரவேற்பளித்தனர். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Sorry, no posts matched your criteria.