India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை மறுதினம் (செப்.17) மிலாடி நபியை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடைகள் அனைத்தும் நாளை இரவு 10 மணி முதல் 18ஆம் தேதி மதியம் 12 மணி வரை விற்பனை இன்றி மூட உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள வட்டார நீதிமன்றங்களில் நடைபெற்றது. இதில்,3155 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் 1785 வழக்குகளுக்கு சமரசம் பேசி தீர்வு காணப்பட்டது. சமரசத் தொகையாக ரூ. 18 கோடி 51 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டது. இதில் கீதா ராணி, மோனிகா, ராஜா, பாலகிருஷ்ணன் மது வர்ஷினி உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் 74 இடங்களில் அமைக்கப்பட்ட 101 தேர்வு மையங்களில் 27,496 தேர் தேர்வு எழுத அனுமதி சீட்டு வழங்கினர். இதில், 21,885 பேர் தேர்வு எழுதிய நிலையில் 5611 பேர் ஆப்சென்ட் ஆகினர். மேலும், அதியமான் கோட்டை பெ.மே.நி. பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.
தர்மபுரியை சேர்ந்தவர் அசோக்குமார்(43). ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருக்கிறார். இவரது மனைவி நதியா 38. தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். நேற்று மனைவியிடம் குடிக்க பணம் கேட்டபோது பணம் இல்லை என கூறி விட்டு நதியா வேலைக்கு சென்று விட்டார். மாலையில்கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தருமபுரியில் BC, MBC வகுனப்பினர்களின் பொருளாதர மேம்பாட்டிற்காக இலவச LPG தேய்ப்பு பெட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற சலவை தொழிலை செய்யும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். LPG தேய்ப்பு பெட்டி பெறம் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் BC, MBC (ம) சீர்மரபினர் அலுவலகத்தில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் கூறியுள்ளார்.
தர்மபுரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & குரூப் 2 ஏ வில் அடங்கியுள்ள பதவிக்கான போட்டித் தேர்வு இன்று நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் 101 தேர்வு மையங்களில் 27540 பேர் தேர்வு எழுத உள்ளனர். காலை 8:30 முதல் 9 மணி வரை தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படுவர். தாமதமாக வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இது குறித்து மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் தமது அறிக்கையில் மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள அண்ணா சிலைகளுக்கும், சிலை இல்லாத ஊரில் அவரது உருவப்படத்திற்கும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் எனவும் இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தர்மபுரி அருகே கிட்டம்பட்டி தண்டாவில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு செய்தார். அப்போது அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலின்படி பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்காத சத்துணவு அமைப்பாளர் மஞ்சுளாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். உடன் பிடிஓ சந்தியா கலைவாணி மற்றும் துறை அலுவலர்கள் இருந்தனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (NABL) தரச்சான்று பெற்றுள்ளதை தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தியிடம் வேளாண்மை துறை அலுவலர்கள் தரச்சான்று காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் வேளாண்மை இணை இயக்குநர்,குணசேகரன், வேளாண்மை துணை இயக்குநர், தேன்மொழி, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி விதை பரிசோதனை அலுவலர் கிரிஜா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தரமான விதை உற்பத்தி செய்ய விதை உற்பத்தியாளர்கள் தொழில்நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும் தரமான விதை என்பது சான்று பெற்ற விதைகளாகும். புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்பு திறன் பிற ரகம் கலப்பு ஆகியவற்றை கொண்ட விதைகளாகும். விவசாயிகள் விதையின் தரத்தினை மாவட்ட விதை பரிசோதனை அலுவலகத்தில் பரிசோதனை செய்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.