Dharmapuri

News January 30, 2025

தருமபுரி மாவட்டத்தில் 70 ஆதார் மையங்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் 70 ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய ஆதார் பெறுவது மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக ஆதார் மையங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் ஆதார் மையத்தில் இலவசமாக கொடுக்கப்படும் விண்ணப்பங்களை மட்டுமே பூர்த்தி செய்து வழங்கவேண்டும். சேவை மையங்களை https://bhuvan-app3.nrsc.gov.in/aadhaar/என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.

News January 30, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

தருமபுரியில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் தர்மபுரி மற்றும் அரூர் சுற்றியுள்ள காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைக்கலாம்.

News January 30, 2025

தருமபுரி ஆட்சியர் தகவல்

image

தருமபுரி மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அழகிற்காக இளம் (young professional) பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம். மேலும் தர்மபுரி மாவட்ட இணையதள முகவரி https://dharmapuri.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News January 30, 2025

தருமபுரி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர் பணியிடங்களுக்கு 42 வயது உட்பட்ட தகுதி வாய்ந்த ஆண் பெண் நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க www.dharampuri.nic.in இணையதளத்தில் பிப்.17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க

News January 30, 2025

பேருந்து நிறுத்தத்தில் விவசாயி சடலம் காவலர்கள் விசாரணை

image

குண்டல்பட்டியை சேர்ந்த முத்துசாமி விவசாயி இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. நேற்று, குண்டல்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே முத்துசாமி சடலமாக இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மதிகோன்பாளையம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2025

தர்மபுரி விவசாயிகளே தவறவிடாதீர்கள்

image

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (ஜன.31) வெள்ளிக்கிழமை நாளை காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. எனவே, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News January 30, 2025

காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

தர்மபுரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தர்மபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். (ஜனவரி 29) இரவு காவல் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News January 29, 2025

தர்மபுரியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று 29.01.2025 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S.மகேஸ்வரன், தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. 58 மனுக்கள் மீது விசாரிக்கப்பட்டு 54 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. புதிதாக 30 மனுக்கள் பெறப்பட்டன.

News January 29, 2025

தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக எம்.சிவா அறிவிப்பு

image

தமிழக வெற்றிக்கழகத்தின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். மாவட்டத் துணைத் தலைவர், துணை செயலாளர், பொருளாளர் ஆகியோரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், சிவாவுக்கு கட்சி நிர்வாகிகள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News January 29, 2025

பூனையானூர் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலி

image

பி.பள்ளிப்பட்டி அருகே உள்ள அஜ்ஜம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (23). கட்டிட தொழிலாளி. இவர் தனது நண்பர் லோகேஷ்வரனுடன் நேற்று அரூர்-க்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது பூனையானூர் அருகே வந்த போது தனியார் பஸ், பைக்மீது மோதியது. இந்த விபத்தில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் லோகேஸ்வரன் படுகாயமடைந்தார். விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

error: Content is protected !!