India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை – 2024 துறை வாரியாக மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்,கி. சாந்தி,தலைமையில் நடைபெற்றது. உடன் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி வட்டத்திற்கு உரிய குமாரசாமிபேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக தமிழக முதல்வரின் வழிகாட்டலில், அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அக்டோபர் 21.10.24 இல் ரூ 60,000, 4 கிராம் தங்கம் ஆகியவற்றைக் கொடுத்து இலவச திருமணத்தை நடத்த கோயில் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் கோயில் நிர்வாகத்தை அணுகவும்.
TATA எலக்ட்ரானிக்ஸ் Hosur நிறுவனத்தின் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற(செப்-27) வெள்ளி அன்று தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும் பெண்களுக்கான முகாமில் +2,டிப்ளமோ,ஐடிஐ(ம) டிகிரி (22,23,24) ஆண்டில் படித்தவர்களும் 18 வயது நிரம்பியவர்களும் தர்மபுரி அரசுகலைக் கல்லூரியில் காலை 11 மணி அளவில் கலந்து கொண்டு பயன்படலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் நடத்தும் இலவச செல்போன் பழுது பார்த்தல் பயிற்சி அக் 3ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சேர விருப்பமுடியவர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகம் தொழிலாளர் உதவி ஆணையம் அலுவலக வளாகத்தில் அசல் மற்றும் நகல் சான்றிதலுடன் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்பு எண்கள்: 04342 230511, 86676 79474.
தர்மபுரி மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா-2024 அக்டோபர் 04 முதல் 13 வரை தர்மபுரி மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான மூன்றாம் காலாண்டு கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் நேற்று முன்தினம் (செப்-23) மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி தலைமையில் நடைபெற்றது. குழு கூட்டத்தில் பொது விநியோக திட்டம் தொடர்பாக ஒருவருக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது..
தமிழகத்தில் அரசு துறைகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை மாவட்டம் தோறும் கண்காணித்து செயல்படுத்தும் வகையில் மாவட்ட துறைகளில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தருமபுரி மாவட்டத்திற்கு மகளிர் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினியை கண்காணிப்பு அலுவலராக தலைமைச் செயலாளர் முருகானந்தம் நியமித்துள்ளார்.
தர்மபுரி GH இயற்கை மருத்துவ பிரிவில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாக இயற்கை மருத்துவ பிரிவு டாக்டர் ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். துளசி சாறு, சிவப்பரிசி கஞ்சி, கேரட் சாறு, சாத்துக்குடி சாறு குடிக்கலாம் எனவும், நாள் ஒன்றுக்கு 2 முறை நிலவேம்பு குடிநீர் குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
தடங்கம் அருகே புதிய சிப்காட் பகுதியில் அடையாளம் தெரியாத 55 வயது ஆண் மற்றும் 50 வயது பெண்ணின் சடலங்கள் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ளனர். ஜிஹெச்சுக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து அவர்கள் யார் வேறு இடத்தில் கொலை செய்து இங்கு வீசப்பட்டனரா என அதியமான் கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 24-25 ஆண்டுக்கு அரவைக்கு வைக்கப்பட்டிருந்த கரும்பை தரகர்கள் மூலம் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் செல்லும் புகாரையடுத்து பதிவு செய்யப்பட்ட கரும்பை வெளிச்சந்தையில் விற்றால் கரும்பு கட்டுப்பாட்டுச் சட்டம் 1966 கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.