India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்டத்தில் பெங்களூரு நெடுசாலையில் உள்ள தொப்பூர் கணவாய் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக அறியப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை 961 விபத்துக்கள் ஏற்பட்டு, 225 பேர் பலியானதாக தரவுகள் கூறுகின்றன. பெங்களூரில் இருந்து தமிழ்நாடு உள் வரும் போது சாலையின் உயரம் குறைவாக இருப்பதால், வேகத்தில் பிரேக் பெயிலியர் ஆவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனாலேயே இதை கொலைகார கணவாய் என்கின்றனர்.

நேற்று காவிேரிப்பட்டினத்தில் இருந்து தர்மபுரி சென்ற அரசு பேருந்தில் கார் பின்புறத்தில் மோதியது. காரில் இருந்து பாண்டிச்சேரியில் இருந்து வந்தவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பேருந்து சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று(ஆக.28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.
▶️ மீனாட்சி மஹால், தர்மபுரி
▶️ PKS மண்டபம், பாப்பாரப்பட்டி
▶️ சமுதாயக் கூடம், மாதேஹள்ளி
▶️ VPRC கட்டடம், செல்லமுடி
▶️ VM மஹால் சிக்கமாரண்ட அள்ளி
▶️ ஸ்ரீ ராகவேந்திரர் மண்டபம், கொலகம்பட்டி
முகாம்களுக்கு பொதுமக்கள் நேரில் சென்று தங்கள் மனுக்களை அளித்து தீர்வு பெறலாம், தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி ஊராட்சி மன்ற அலுவலக விளையாட்டு மைதானம், மாரவாடி, மல்லிகா பேலஸ் திருமண மண்டபம், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி சமுதாய கூடம், பூதனஹள்ளி, மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜக்குபட்டி, பாலக்கோடு VPRC கட்டிடம், பி.கொல்லஅள்ளி, அரூர் VPRC கட்டிடம் ஜம்மனஹள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.27) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

தர்மபுரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை சார்பில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு நிபுணர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் போன்ற பதவிகளுக்கு, விருப்பமுள்ளவர்கள் செப்.25-க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ரூ.40,000 – ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்படும். கல்வித் தகுதி மற்றும் சம்பளம் உள்ளிட்ட விவரங்களுக்கு <

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் செப்.9 முதல் 11 வரை ட்ரோன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. ட்ரோன்களை இயக்குவது, விதிமுறைகள், அரசு தரும் மானியம், ட்ரோன்களை வைத்து தொழில் தொடங்குவது தொடர்பான ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர் 9543773337 / 9360221280 எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) 04342-233299 தர்மபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். *உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க*

விநாயகர் சதுர்த்தி நாளில் வீட்டில் பிள்ளையார் வைத்து, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள், சுண்டல், மோதகம், கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைத்து வழிபடலாம் (அ) அல்லது தர்மபுரி சாலை விநாயகர் கோயிலுக்கு சென்று வரலாம். வழிபடுவதற்கான நேரம் : காலை 07.45 மணி முதல் காலை 08.45 மணி, 10.40 மணி முதல் பகல் 01.10 மணி, மாலை 05.10 மணி முதல் இரவு 07.40 மணி. SHARE IT
Sorry, no posts matched your criteria.