India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களின் ஊராட்சி அலுவலர், உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இன்று (செ.1) முதல் <

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களின் ஊராட்சி அலுவலர், உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இன்று (செ.1) முதல் <

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் இன்று (ஆக.31) மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொண்டு, அருவியில் குளிக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.31) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக
J. ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் ஆதம், பென்னாகரம் முரளி மற்றும் பாலக்கோடு வெங்கட்ராமன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை அனைவருக்கும் ஷேர் செய்க!

தர்மபுரி மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலியாக உள்ள 1446 Airport Ground Staff, Loaders, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு போதுமானது. சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ( ஆகஸ்ட் 31 ) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, நீர்வரத்து 24,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் சதீஷ் பொது மக்கள் அருவிகளில் குளிக்க தடை விதித்துள்ளார்.

தர்மபுரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி இன்று நடைபெற்ற மிதிவண்டி பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் கலந்து கொண்டார். உடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சாந்தி, நகர் நல அலுவலர் இலட்சிய வர்ணா உள்ளிட்ட பயிற்றுநர்கள், பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் உள்ளனர்.

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியாக ஊதியம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நல வாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் துறை ஆணையர்-044-24321302, தொழிலாளர் மேம்பாட்டு துறை-044-25665566, கட்டுமான தொழிலாளர் நலவாரியம்-044-28264950, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம்-044-28110147, வீட்டு பணியாளர் நலவாரியம்-044-28110147. ஆட்சியர் அலுவகத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

பென்னாகரம் அருகே, மடம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், தனியார் பஸ் கண்டக்டர்.கடந்த, 28ல், தன் பைக்கில் தர்மபுரி நோக்கி சென்றுள்ளார். அப்போது வண்ணாத்திப்பட்டி அருகே, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.