India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரியில் 03.10.2025 அன்று முதல் வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும். தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் .மேற்கண்ட நாட்களில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை பெற்று பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று (செ.26) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. சூர்யா DSP தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் IT

அதிமுக கழக பொதுச்செயலாளர் இபிஎஸ் தருமபுரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் 28.09.2025 சுற்றுப்பயணத்தில் பங்கேற்க உள்ளார். தருமபுரி தொகுதி நல்லம்பள்ளி பிரிவில் மாலை 4.00 மணிக்கு, BSNL அலுவலகம் அருகில் 4.30 மணிக்கு, பாப்பிரெட்டிப்பட்டி கடத்தூர் பஸ் நிலையத்தில் மாலை 6.00 மணிக்கு, அரூர் பஸ் நிலையத்தில் இரவு 8.00 மணிக்கு பொதுமக்களுடன் சந்திப்பு நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் மகாத்மா காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டிகள் முறையே 07:10:2025, 08:10.2025 ஆகிய நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் முற்பகல் 09.30 மணி முதல் நடைபெறவுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதிஸ் தெரிவித்தார்

தவெக தலைவர் விஜய் தருமபுரியில் நவ.1ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக நவ.22இல் சேலம், தருமபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷேர் IT

தவெக தலைவர் விஜய் தருமபுரியில் நவ.1ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக நவ.22இல் சேலம், தருமபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷேர் IT

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விதிமுறைகளை மீறி, மின் வேலி அமைப்பது கிரிமினல் குற்றம் என மின்சாரத் துறை எச்சரித்துள்ளது. மேலும், பச்சை மரங்கள் மற்றும் இரும்பு கிரில்களில் அலங்கார சீரியல் விளக்குகளைக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கனரக வாகனங்களை மின்கம்பிகளுக்கு அடியில் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கக் கூடாது. மின் குறைகளுக்கு 94987 94987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி 7வது புத்தகத் திருவிழா இன்று (செப்.26) துவங்கி அக்டோபர் 5 வரை நடைபெறுகிறது. 60 அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகள், லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நூல் வெளியீடு, கருத்தரங்கு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், பல் துறை அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன. இதற்கு அனுமதி இலவசம்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், செப்டம்பர் 27-ஆம் தேதி தருமபுரி வள்ளலார் திடலில் “மலை வளமே, மண் வளம்!” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் மாநில வணிகர் பாசறை செயலாளர் மு.வி. பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கட்சியின் அனைத்துப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் இக்கூட்டத்தில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் காலாவதியான உணவு, அதிக தொகைக்கு விற்பனை செய்தல், தரமற்ற உணவு போன்றவற்றை உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்களை foodsafety.tn.gov.in என்ற இணையதள மூலம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.