Dharmapuri

News December 17, 2024

நடன போட்டியில் முதல் பரிசு முன்னாள் அமைச்சர் பாராட்டு

image

மாட்லாம்பட்டியில் உள்ள அரசு சட்டகல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலை விழா 2024 கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், முதலிடம் பிடித்த ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரிக்கு, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

News December 17, 2024

தருமபுரி மாவட்டத்தில் திருக்குறள் போட்டி 

image

தருமபுரி மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினாப் போட்டி வரும் 21.12.2024 அன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் பிற்பகல் 1 மணி அளவில் வருகை புரிந்திருக்க வேண்டும். தருமபுரி மாவட்ட போட்டியாளர்கள் முன்பதிவிற்கு 7373002611 எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News December 17, 2024

ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா ஆட்சியர் சாந்தி அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவு கூரும் வகையில்18.12.2024 முதல் 27.12.2024 வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா நடைபெற உள்ளது ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடர்பாக கணினித்தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆட்சிமொழி மின்காட்சி உரை, ஆட்சி குறிப்புகள் வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, மற்றும் பல்வேறு நிகழ்ச்சியை ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்

News December 17, 2024

வாகனங்கள் ஏலம் குறித்து காவல்துறை பொது அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் படி பறிமுதல் செய்யப்பட்டுள்ள 4 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 91 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 95 வாகனங்கள் டிச 18ஆம் தேதி காலை 8 மணிக்கு ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் கலந்து விருப்பமுள்ளவர்கள் பத்தாயிரம் முன் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம் என தர்மபுரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

News December 16, 2024

இலவசமாக கோமாரி தடுப்பூசி: ஆட்சியர் தகவல்

image

கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி தடுப்பூசி போட்டு பயன்பெறலாம். விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனையை அணுகியும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 9445001113, 9445032563, 9443077435, 8144874747 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

கடந்த 5 ஆண்டுகளில் 11 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் தற்போது 1 லட்சத்து 84 ஆயிரத்து 513 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 88 ஆயிரத்து 185 பேர் பெண்கள். 2,140 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். பதிவு செய்தவர்களுக்காக தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில், கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் இதுவரை 11 ஆயிரத்து 700 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News December 14, 2024

கம்பீர புஷ்கர் விருதுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்

image

2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ள கம்பீர புஷ்கர் விருதிற்கான தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது. இதற்காக https://awards/tn.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளை(டிச 15) கடைசி நாளாகும். மேலும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

கோமாரி நோய் தடுப்பூசி: ஆட்சியர் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் டிச.16ஆம் தேதி முதல் ஜன.05ஆம் தேதி வரை 3 வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது. கால்நடை வளர்ப்போர் தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார்.

News December 13, 2024

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்து தருமபுரி எம்.பி கேள்வி

image

 மக்களவையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்து தருமபுரி எம்.பி ஆ.மணி கேள்வி எழுப்பினார். இதில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (PMAY) கீழ் தகுதியான நபர்கள் பலன் பெறுவதை அரசு உறுதி செய்துள்ளதா என்பது குறித்தும், மேலும் இது போன்ற பல்வேறு கோரிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

News December 13, 2024

விவசாயிகளுக்கு வழங்க 12,153 டன் உரங்கள் இருப்பு: அதிகாரி தகவல்

image

 அண்மையில் பரவலாக மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு மழை சராசரியை விரைவில் எட்டும் வாய்ப்பு உள்ளது. இதனை அடுத்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 12,153 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயிர் விளைச்சலை அதிகரிக்க வேண்டும் என வேளாண்மை துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!