India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மாவட்ட முகமை மூலம் சமுதாய வளப் பயிற்றுநர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், நாளை (செப். 30) மாலை 5 மணிக்குள், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, 2வது தளம், தர்மபுரி என்ற முகவரியில் நேரில் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், மிட்டாநூலஅள்ளியைச் சேர்ந்த சக்தி – இந்துமதி தம்பதிக்கு, நேற்று (செப். 28) அதிகாலை நூலஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பெண் சிசு, பேச்சு மூச்சு இல்லாமல் இறந்தது. செவிலியர் பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்ததாகக் கூறி, குழந்தையின் பெற்றோர் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

1. மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077, 2. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993, 3. பேரிடர் கால உதவி -1077, 4. குழந்தைகள் பாதுகாப்பு – 1098, 5. விபத்து உதவி எண்-108, 6. காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100, 7. பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091, 8. விபத்து அவசர வாகன உதவி – 102. ஆபத்திற்கு உதவும் இந்த எண்களை உங்கள் போனில் சேமித்துக்கொண்டு, அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

காரிமங்கலம் அருகே பல்லேனஅள்ளியில், சொத்துத் தகராறு காரணமாக மாதம்மாள் (55) என்ற மூதாட்டியை, அவரது உறவினர் அருண்குமார் (27) கடப்பாரையால் தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவானார். நேற்று காரிமங்கலம் போலீசார் வீட்டின் அருகே பதுங்கி இருந்த அவரை பிடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவன் திருப்பதி ஆகியோர் நேற்று தர்மபுரி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கபடி போட்டியில் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஏராளமானவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 30) நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.
1) தர்மபுரி: வி.முத்தம்பட்டி, ஊராட்சி மன்ற அலுவலகம்.
2) நல்லம்பள்ளி: பகலஹள்ளி, சமுதாய கூடம்.
3) ஏரியூர்: மலையனூர், அரசு மேல்நிலைப்பள்ளி.
4) கடத்தூர்: ஸ்ரீ மீனாட்சி மகால்.
5) காரிமங்கலம்: அடிலம், ஊராட்சி மன்ற அலுவலகம்.
6)பாலக்கோடு: எர்ரனஹள்ளி, சமுதாய கூடம், ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று (செ.28) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. சூர்யா DSP தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் IT

தருமபுரியில் மொத்தம் 65 தேர்வு மையங்களில் சுமார் 20109 தேர்வர்களில் இன்றைய தினம் 16055 தேர்வர்கள் இப்போட்டித் தேர்வினை எழுதினார்கள். மேலும், 4054 தேர்வர்கள் இப்போட்டித் தேர்வினை எழுத வருகை தரவில்லை. தருமபுரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டித் தேர்வினை 79.84 சதவிகிதத்தினர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த ஆய்வின் போது, நல்லம்பள்ளி வட்டாட்சியர் பிரசன்ன உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் இருந்தனர்.

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
Sorry, no posts matched your criteria.