India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.29) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக குணவர்மன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 30) நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.
1) தர்மபுரி: வி.முத்தம்பட்டி, ஊராட்சி மன்ற அலுவலகம்.
2) நல்லம்பள்ளி: பகலஹள்ளி, சமுதாய கூடம்.
3) ஏரியூர்: மலையனூர், அரசு மேல்நிலைப்பள்ளி.
4) கடத்தூர்: ஸ்ரீ மீனாட்சி மகால்.
5) காரிமங்கலம்: அடிலம், ஊராட்சி மன்ற அலுவலகம்.
6)பாலக்கோடு: எர்ரனஹள்ளி, சமுதாய கூடம், ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் ஒப்புதலின்படி, தருமபுரி மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சரவணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், சுகன்யாலட்சுமி, மகாதேவன், கல்பனா மற்றும் இளையராஜா ஆகியோர் மாவட்ட துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சரவணன் அறிக்கை வாயிலாக இன்று தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பின்படி, 2025-26 கல்வியாண்டில் 10 முஸ்லிம் மாணவ/மாணவிகளுக்கு வெளிநாடுகளில் உயர் கல்வி பயில நிதி உதவி வழங்கப்பட உள்ளது. ஒருவருக்கு ரூ.36 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. QS தரவரிசையில் முதல் 250 இடங்களில் உள்ள கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கூடுதல் உதவி உண்டு. www.hbcbcmw.tn.gov.in இணையதளத்தில் அக்.10க்குள் விண்ணப்பிக்கலாம்.

தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் காந்தி ஜெயந்தியை (02.10.2025) முன்னிட்டு, அக்.1 இரவு 10.00 மணி முதல் அக்.3 காலை 12.00 மணி வரை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) சில்லறை விற்பனைக் கடைகள், இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் மதுபானங்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுதல், சொத்து வரி செலுத்துதல் உள்ளிட்ட 32 சேவைகள் இனி உங்கள் உள்ளங்கையில். அரசின் சேவைகளுக்கு இனி நீங்கள் எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் ஒரே வாட்ஸ் அப் எண்ணில் கிடைக்கும் . 9445061913 என்ற எண்ணிற்கு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ என மெசேஜ் அனுப்பினால் போதும். நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க

தர்மபுரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் 1 வருட தொழிற்பயிற்சிக்கு விண்ணபிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது . 2021 முதல் 2025 ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறைகளில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் <

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மாவட்ட முகமை மூலம் சமுதாய வளப் பயிற்றுநர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், நாளை (செப். 30) மாலை 5 மணிக்குள், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, 2வது தளம், தர்மபுரி என்ற முகவரியில் நேரில் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.