Dharmapuri

News July 5, 2025

இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயன்பெறலாம்

image

கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்ற ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். *உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்*

News July 5, 2025

தருமபுரி: உள்ளூரிலேயே சூப்பர் வேலை அறிவிப்பு

image

தர்மபுரியில் சமூகநலன்&மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் (DHEW) காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th,12th தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.12,000-ரூ.20,000 வழங்கப்படும். விரும்புவோர் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பத்தை பதிவிறக்கி வரும் 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04342- 230544. *ஷேர் பண்ணுங்க*

News July 5, 2025

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர்

image

சாதிபாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் ரூ. 1 கோடி வழங்கப்பட உள்ளது. அதன்படி தருமபுரியில் வரும் 2025ஆம் ஆண்டிற்காக விருது பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்கள் மேலே உள்ள புகைப்படத்தை பார்க்கவும்

News July 5, 2025

தர்மபுரியில் போலீசார் ரோந்தில் ஈடுபாடு

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று இரவு முழுவதும் காவல்துறை ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட இரவு ரோந்து அலுவலராக திரு.பி.ராமமூர்த்தி, அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் பொறுப்பான போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கான தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்பு எண்கள் மேலே உள்ளது.

News July 4, 2025

ஏரியூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி

image

தருமபுரி கிழக்கு மாவட்டம் ஏரியூர் கிழக்கு ஒன்றியம் திமுக BDA நிர்வாகிகளுக்கு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பயிற்சி இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்த நிகழ்வானது ஏரியூர் ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக ஏரியூர் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

News July 4, 2025

ஆட்சியர்(வளர்ச்சி)/திட்ட இயக்குநர் அவர்களின் அரசு வாகனம் ஏலம்

image

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)/திட்ட இயக்குநர் அவர்களின் அலுவலக அரசு வாகன எண் TN 29 AJ 5584 (Ambassador grand 1800) (எரிசக்தி – பெட்ரோல்) கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட வாகனத்தை 15 தேதி 4.00 மணியளவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) /திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தருமபுரி அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது. என ஆட்சியர் சதீஷ் தகவல்

News July 4, 2025

அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

image

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பிற்கான சேர்க்கைக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வரும் ஜூலை.07ஆம் தேதி அனைத்து பாடப்பிரிவுகளும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. புதிய கலையரங்கத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 4, 2025

தர்மபுரி மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் 1/2

image

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் <>இந்த லிங்க் மூலம்<<>> அல்லது (044‑2495 1495) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், மாவட்ட எஸ்.பி-யிடமும் (9498101055) , மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமும் புகார் செய்யலாம்.*இந்த எண்களை நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்* <<16937048>>தொடர்ச்சி<<>>

News July 4, 2025

தர்மபுரி மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் 2/2

image

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல்&தொல்லை, சட்ட விரோத கைது& தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்) புகைப்படங்கள் தேவை.

News May 8, 2025

அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2 மட்டும். மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!