Dharmapuri

News October 1, 2025

தர்மபுரி: 2 மாதத்தில் லஞ்ச வழக்கில் 5 அதிகாரிகள் கைது

image

தர்மபுரி மாவட்டம், சின்னமாட்லாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்வரின் ஜிஎஸ்டி எண் திடீரென முடக்கப்பட்டதால், துணை வணிக வரி அதிகாரி செல்வக்குமாரை சந்தித்த போது அவர் ரூ.5000 லஞ்சம் கேட்டுள்ளார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்வக்குமாரை கைது செய்தனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் தர்மபுரி மாவட்டத்தில் விஏஓ, இன்ஸ்பெக்டர், போலீஸ், கருவூல அதிகாரி, வணிகவரி அதிகாரி என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News October 1, 2025

தர்மபுரி: வங்கி ஊழியர் மீது புகார் அளிக்கணுமா?

image

வங்கிகளில் பணப்பரிவர்த்தனை, கூடுதல் கட்டணம் கேட்பது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்காதது போன்ற புகார் இருந்தால் ரிசர்வ் வங்கியின் <>இந்த லிங்கின்<<>> மூலம் புகார் செய்யலாம். அல்லது, இதற்கான சென்னை மண்டல (044-25361910) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து பிராந்திய மற்றும் கிராமப்புற வங்கிகள், தொடக்க நிலைக்கூட்டுறவு வங்கிகள் என அனைத்தின் மீதும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்கள்

News October 1, 2025

தர்மபுரி: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை

image

இந்திய ரயில்வேயில் செக்‌ஷன் கண்ட்ரோலர் பதவியில் 368 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 20-33 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் <>இந்த லிங்க்<<>> மூலம் வரும் அக்.14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது ரயில்வேயின் முக்கிய பதவி. ரயில்வே நேரம் கண்காணிப்பு, மேனேஜ்மெண்ட், பதிவுகளை பராமரித்தல் போன்றவை இவர்களின் முதன்மையான வேலை. *நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க*

News October 1, 2025

தர்மபுரி: GST குறைக்கவில்லையா? ஒரு CALL

image

மத்தியரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண் தொடர்பு கொண்டு (அ) <>இந்த<<>> லிங்க்கில் சென்று தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 1, 2025

தருமபுரியில் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் பொதுவிதிமுறைகளை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட டாடா 207, ஐசர் லாரிகள், டாடா ஏஸ், TVS XL Super Heavy Duty உட்பட 8 வாகனங்கள் வரும் 06.10.2025 தேதி காலை 11.00 மணிக்கு சேலம் பெங்களூரு ரோடு, 5K Cars Service Centre அருகில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஏலம் கேட்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 1, 2025

தர்மபுரி: மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 11-12 ஆம் வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 14 தேதி அன்றும், தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 15 தேதி அன்றும் நடைபெறவுள்ளன.பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சதீஸ் கூறியுள்ளார்.

News October 1, 2025

அகில இந்திய தொழிற்தேர்வு அறிவிப்பு

image

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT-ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skiltraining.tn.gov.in தளத்தில் வரும் அக்.10க்குள் விண்ணபிக்க வேண்டும். முதல் நிலை தேர்வுகள் நவ.4, செய்முறை தேர்வுகள் நவ.5 தேதியில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

News October 1, 2025

தர்மபுரி மக்களுக்கு குட்நியூஸ்! அரசின் முக்கிய அறிவிப்பு

image

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் 3வது கட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒகேனக்கல்லில் இருந்து நீருந்து நிலையங்களின் வழியாக பருவதனஹள்ளி சுத்திகரிப்பு நிலையத்தில் நீா் சுத்திகரிக்கப்படவுள்ளது. மதிப்பீடு ரூ.8,428.50 கோடி என்றும், 38.81 லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 1, 2025

தருமபுரியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

image

தருமபுரி மாவட்டத்தில் பொதுவிதிமுறைகளை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட 8 வாகனங்கள் – இதில் டாடா 207, ஐசர் லாரிகள், டாடா ஏஸ், TVS XL Super Heavy Duty ஆகியவை அடக்கம் – வரும் 06.10.2025 காலை 11.00 மணிக்கு 10 சேலம் பெங்களூரு ரோடு, 5K Cars Service Centre அருகில் ஏலம் விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் பங்கேற்கலாம்.

News September 30, 2025

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொது விநியோகத் திட்டப் பொருட்கள் முன்கூட்டியே வழங்கப்படுகின்றன. குறிப்பாக, 70 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அக்டோபர் 05 மற்றும் 06 ஆம் தேதிகளில் அவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று பொருட்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!