India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய கடற்படையில் உள்ள குரூப்.பி மற்றும் குரூப்-சி பிரிவில் உள்ள சார்ஜ்மேன், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது 18 முதல் 45 வரை இருக்கலாம். 10th முதல் பொறியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 18,000- 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள் <
தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் <
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
ஓசூரில் கடந்த 21ஆம் தேதி பாலம் விரிசல் ஏற்பட்டதால் பெங்களூரு, மைசூர் செல்லும் வாகனங்களை தர்மபுரிக்கு மாற்றம் செய்து பிரித்து விடும் பணி தொடங்கியுள்ளது. இதன்படி தர்மபுரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி வழியாக (என்எச்-44) செல்லும் கார்கள் மற்றும் சரக்கு வாகனங்களை, தர்மபுரி-ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் நல்லூருக்கு அமைக்கப்பட்டு வரும் புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக பிரித்து அனுப்பப்படுகிறது.
தர்மபுரி கோட்டத்திற்குட்பட்ட தர்மபுரி, சோலை கொட்டாய் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜூலை.08) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பஸ் நிலையம், கடைவீதி, அன்னசாகரம், விருபாட்சிபுரம், அளேதர்மபுரி, கடகத்தூர், கொளகத்தூர், குண்டல்பட்டி, ஏ.ஜெட்டிஅள்ளி, ஏ.ரெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, நீலாபுரம், வெள்ளோலை,கோம்பை, ஏ.கொல்லஅள்ளி <<16972667>>தொடர்ச்சி<<>>
குளியனூர், மொடக்கேரி, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூர், சோலைகொட்டாய், மூக்கனூர், கொட்டாவூர், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாயக்கனஅள்ளி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயா தெரிவித்துள்ளார். உங்க பகுதி மக்களுக்கு இந்த செய்தியை தெரியப்படுத்துங்க.
தருமபுரி, கடந்த 4 ஆண்டுகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 1,57,820 பயனாளிகளுக்கு ரூ.122.02 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள், கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் தகவல் அளித்துள்ளார். 2021-22 முதல் 2024-25 வரை 411 நபர்களுக்கு ரூ.10.74 இலட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு நேரத்தில் மாவட்ட காவல்துறை சிறப்பு ரோந்து நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. மாவட்ட பொறுப்பாளராக ஆய்வாளர் திரு.ஜே.ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தொடர்பு கொள்ள தொடர்பு எண்கள் மேலே உள்ளது. பொதுமக்கள் இரவு பாதுகாப்பிற்கு தொடர்பு கொள்க.
மொரப்பூர் சாலையில் இன்று (ஜூலை 6) முக்காரெட்டிப்பட்டியை சேர்ந்த முல்லைவேந்தன் தனது மனைவி சசிகலா (28) மற்றும் இரு குழந்தைகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் மொரப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து சசிகலா கீழே விழுந்ததில், பின்னால் வந்த லாரி அவரது தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நாளை (ஜூலை 7) காலை 9.00 மணிக்கு தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். காலை 11 மணியளவில் தருமபுரி மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் புதிய கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.